பக்கங்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

உண்மையான உண்மை !

உண்மையான  உண்மை !
அவனவன் சுயமொன்றே அவனவன்  மயம்.!

உடனென்றோ உறவென்றோ 
ஏதுமில்லை வையம் .!

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு சிந்தனை !
ஒவ்வொரு கணமும் வெவ்வேறு சூழல் !

பகைமையும் நட்பும் பிறரிடமல்ல
உணர்ந்துப்பார்த்தால் நம் மனமே எல்லை !

முடிவாய் முடிவது நம்மிடமல்ல
எல்லாம் முடிந்துப்போவது - சிவனிடமே ! 


                                                                                           சு.பெருமாள் (எ) காதல்சிவன் .