பக்கங்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

பெண்மை அது உண்மை !

பெண்ணில் உயிர் முளைக்கும் பெண்மையில் உயிர் பிறக்கும் .
என்னைக்கொன்றப்பின் அவன் உயிர்ப்பெற்றான் என்னிடம் .
என்னைவென்றப்பின் அவன் மதிப்புப்பெற்றான் மண்ணிடம்.
பெண்மைஎன்பவள் ஓர் பேராழி  !
இதில் விழுந்து எழுந்தப்பின்தான் ஒவ்வொருவனும்
உயிர்ப்பெறுவதும் . மனிதனாவதும்.
                                                                                  
                                                                      -சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

விட்டுக்கொடுக்காதே!

விட்டுக்கொடுப்பவன் கோழையாய் பார்க்கப்படுகிறான்
பொறுமைக்கொண்டுப்போகாதே !
எருமையாகிப்போவாய் .
பிறர் அடிக்கும்போதே உதைத்துவிடு .
திருப்பி அடிக்க அவகாசம் கொடுக்காதே !
முழு நல்லவனாய் வாழ்வதில் எந்த அர்த்தமுமில்லை !
இது நான் அனுபவித்த உயிரின் எல்லை !
முடிந்தவரை வல்லவனாய் வாழ்ந்துவிட்டுப்போ !
எப்படி வாழ்வினும் ஒருநாள் !
உலகம் குறைசொல்லும்  உறவு பழிசொல்லும்
உனக்காக வாழ்ந்துவிட்டுப்போ
இருக்கும்வரை  சிரித்துவிட்டுப்போ .
                                                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .