பக்கங்கள்

சனி, 14 ஆகஸ்ட், 2010

பெண்ணியம் !

இறுக்கிப்பிடித்தேன் உருகிப்போனான்
வாரிக்குடித்தேன் உயிரில் ஆனான் - ஆண் .
கண்ணில் எனை களவு செய்துப்போனவன்
கனவில் எனை கலவி செய்துப்போனானே!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அவள் நினைவில் !

வெண்ணையில் செய்த கன்னங்கள்
எனை வழுக்கி விட்டன அவள் நினைவில் .!
எண்ணம் அவள் ஆனதினால்
கவிதையாகிறேன் அவள் நிழலில் .!
கள்ளங்கபடமற்றவள் அவள் புன்னகை ஆதாரம் .
மறைக்கின்ற காதல் அவள் விழிகளில் நாட்டியமாடும் !
ஆயிரம் சூரியன் ! என் முகத்தில் ஒளிவீசும் (ஒளிரும்)
அவள் தாமரை முகம் எனை நோக்கி மலரும்போது !
(அவள் தாமரை இதழ் எனக்காக விரியும்போது ).
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .