பெரும் பாலைவனத்தில் ஒரு சிறு புல்லாய் !
எல்லையிலா இருள் வானில் ஒரு சுடர் நட்சத்திரமாய் !
உலகம் முடிந்தப்பின்னே ஒரு சலனமில்லா அமைதியாய் !
எங்கேயும் நீ ! எல்லாவற்றிலும் உயிர் தீயாய் நீ !
ஏது சொல்வேன் மாயனே ! மயான நாதனே !
யாதும் எதுவும் நீயே நீயே - சிவனே !சிறிதும் உனை நீங்காது தொடர்வேனே மனத்தால் !
நீங்கினின் நிறைந்திருப்பேனே உனக்குள்ளே முடிவாய் !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .