பக்கங்கள்

வியாழன், 16 செப்டம்பர், 2010

யாதும் நீயே !

அகன்ற வாழை இலையில்   ஒரு  துளி  நீராய் 

பெரும்  பாலைவனத்தில்   ஒரு  சிறு புல்லாய்   !
எல்லையிலா  இருள்   வானில்  ஒரு  சுடர் நட்சத்திரமாய் !
உலகம்  முடிந்தப்பின்னே  ஒரு  சலனமில்லா  அமைதியாய்  !
எங்கேயும்  நீ  ! எல்லாவற்றிலும்  உயிர்  தீயாய்  நீ !
ஏது சொல்வேன்  மாயனே !  மயான  நாதனே  !
 யாதும்  எதுவும்  நீயே  நீயே  - சிவனே !
 சிறிதும் உனை  நீங்காது  தொடர்வேனே மனத்தால் !
 நீங்கினின் நிறைந்திருப்பேனே உனக்குள்ளே முடிவாய் !
                                                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் .