பக்கங்கள்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சிவனுக்கு தகும் . !

நான் !!!!! - என்பது !
சிவனுக்கு தகும் .
அது அவன் ஒருவனுக்கே - சரிமுறையாகும் . !

                                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உயிர் வேதம் !

என் வேரில் நீரை ஊற்றி !
உயிர் வேதம் கற்றுக்கொடுத்தான் .

பூ ! காய் ! கனி ! என்று
சுழற்சி விதி செய்தான் .

பிறப்பின் ரகசியத்தை
சற்று இறக்கசெய்து  உணர்த்தினான் .

ஞானம் பெற்றேன் !
என்னில் ஓர் உலகை உணர்ந்து
பலவாராய் அவனால் சுழற்றப்பெற்று .!

அவன் வெறும் ஆண் அல்ல !
அப்பொழுது அவன்தான் -  என் கடவுள் .!

எப்பொழுதும் அவன்தான் என் காவல் !
                                                                          - சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..
                              

அவன் நீதி !

கடவுள் மறுப்பே
கடவுளின் மற்றொரு பிறப்பு !
எவனெவனுக்கு எதுஎது  சரிஎனப்படுதோ  ?
அவனவன் அதுஅதை வைத்துக்கொள்ளட்டும் .
எந்த விதத்திலும் எல்லாமும் 
நல்லதைப்பெறவேண்டும்
முடிவாய் எல்லாமும் அவனுள்ளே  முடிய (அழிய)வேண்டும் .-அவன் நீதி !
                            - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

புவியின் அச்சு !

உன்னோடு ஒப்பிட
பொருளில்லை வையத்தில் !
பெண்ணே உன் மையத்தில்
புவியின் அச்சு !
உலகவிழி உனைப்பார்க்க
நீயோ எனை பார்க்க
அய்யோ நான் கடவுளாகிறேன் - காதலில் .
                                           சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .