பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

உடைப்படுகிறது - மனம் . பழி செயலோ ? - என்று .!

யோனி வழியே - வந்தவர்கள்
யோனியில் புக ஏங்குகிறார் !
ஆண்மை வழியே  - யோனிப்பெற்றவர்கள்
ஆண்மைக்காய் ஏங்குகிறார்  !
இருவர் ஏக்கம் - இயற்க்கை !
அடைதலும் எளிது !
பாவிமனிதன் வகுத்துக்கொண்ட
வரைமுறை தடுக்கிறது .!
உடல் - உடைப்படும்போதெல்லாம்
உடைப்படுகிறது - மனம் .
பழி செயலோ ? - என்று .!
                                                - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

காண்பதெல்லாம் காதலி !

மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் !
காதலில் விழுந்தவனுக்கு காண்பதெல்லாம் காதலி !
உன்னில் உயிர்த்துக்கொள்ள
ஒவ்வொரு நொடியும்
என்னை நான் இழக்கிறேன் - என்னில் .
மௌனத்தின் வலியால் .
                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திக்குமுக்காடிப்போனேன் !

உன் அங்கமைப்பில்
நான் சங்கமித்தேன் !

உன் பங்களிப்பில்
நான் திக்குமுக்காடிப்போனேன் !

வங்கக்கடல் சுரங்கம்
உன்னிடத்தில் அடங்கும் !

வானில் இல்லா சுவர்க்கம்
நம் வயிற்றுக்கு கீழே  கி(டை)டக்கும் !
                                                                       சு.பெ.காதல்சிவன் .

ஓர் ஒற்றன் !

உன்னிரு மேட்டின்
கூர் கரும் உச்சிதனை - விழி காணின் !

இவனுள்ளே ஒடுங்கி
ஒளிந்துக்கிடக்கும்  - ஓர் ஒற்றன் !

ஓங்காரமாய் எழுந்து
முழக்கமிடக்கூடும் !

போர்தனை புரிதல் செய்ய .!
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஏன் ?? உரைக்கவில்லை ..!!!

என் அறிவிற்க்கு
எட்டியதே இல்லை
அவள் மனதின் சூட்சமம் .

அவள் நினைவிலேயே உழல்கிறேன்
என் அறிவின்மையின் - மீட்சிமம் .

கடல் கரையை கடக்காது
உலகத்திற்கே தெரியும் .

அவளலையில் தத்தளிக்கும்
என் ஜென்மத்திற்கு  ஏன் ?? உரைக்கவில்லை ..!!!

                                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

பேராயுதம் - நாக்கு .!

எதிர்பார்ப்பற்ற உடன் பிறப்புகள் - விரல்கள் .
பேராயுதம் - நாக்கு .
கடைசி அஸ்திரம் - உயிர் .
வாழும்வரை ஆஸ்தி - உடல் .
இன்பத்திலும் துன்பத்திலும் போதை - மனம் .
எப்பொழுதுமே எந்த உறவுமின்றி
சொந்தமாய் இருக்கும்
உள்ளத்தில் ஒளிந்து நின்ற கடவுள் .!
                                                           - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கொம்பு முளைத்த இரு பூமி !

ஏதோ அதில் !
ஏனோ அவன் .
மர்மமாய் வைத்தான் !

அது ! தானே தன்னை முன்னிறுத்தும்
முன்னவர் மூளையில் தீ படுத்தும் !

நெஞ்சில் - நின்று !
உடன்பட்டவன் நெஞ்சைத்தாங்கும் !

அது ஆடும் ஆட்டத்திற்கு
ஆடவன் ஆடிப்போவான் !

எத்தனைப்பசி தீர்ந்தப்பின்னும்
அதன் வசி(ஈர்ப்பு) மாறாது !

நெருப்பது  உடல் வெளிப்புறம் சுடும் !
இதன் கருப்பது உடல் உட்புறம் சுடும் !

நெருப்பைத்தொட்டவன் புண்ணாகிப்போவான் !
இதனைத்தொட்டவன் ஆணாகிப்போவான் !

விரலுக்குத்தனி வீரம் வரும் !
பல்லிற்கு தனி சாரம் வரும் !

அய்யோ ! அய்யோ !
அதனுள் எத்தனை உண்மை - பொய்யோ !
 
ஒற்றைக் - கொம்பு  முளைத்த இரு பூமி !
அவள் தேகவானில் சுற்றுதே !

என் கம்பைப்பிடுங்கி அடிமையாக்கி !
அவளுலகில் கொல்லுதே !
                                                    -சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

நின் தாள் என் ஊழ் .!

உனை நம்பி நான்
ஏமாற்றப்படுவேனாயினும் !
உனை பூஜிப்பதால்
வஞ்சிக்கப்படுவேனாயினும் !
உனை ஏற்று அடிமையாகி - அழுதுக்கிடந்து
அழியப்படுவேனாயினும் ! 
என் அப்பனே ! சிவப்பெருமானே !
அப்பொழுதும் நீயே வேண்டும் - உடனாய் !
எப்பொழுதும் நீயே எந்தன்  உயிராய் !
இருந்தாலும் இறந்தாலும்
உன்னோடுவே உன்னில் நான் - உன்னாலே !
சிவசிவ என் தலைவனே ! நின் தாள் என் ஊழ் .!
                                              - காதலுடன்  சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

போதிமரம் நீ !

என் போதிமரம் நீ  !
என் பாதி உயிர் நீ !
என் வாழ்வின் வரம் நீ !
என் வாசல் வா நீ !
என் காதல்வாணி !
                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மண்டிக்கிடப்பேன் !

உன்னிடம்  அழுவதொன்றைத்தவிர
என்னால் இயன்றதொன்றும் கிடையாது !
இழப்பேனோ ? பெறுவேனோ ? தெரியாது !
நன்மை தீமை மனம் அறியாது !
உன்னிடம் மட்டுமே  மண்டிக்கிடப்பேன்.
சிவனே !
நீயே கதியென்று !
                                      சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

உணர்வாய் !

உதவிப்பெறு !
              பிறர் மனம் தெரியும் .
உதவிப்பாரு !
              உன் மனம் புரியும் .

உன் மனதில்  - கடவுளை வைத்துப்பார் !

கடவுள் மனதில்  - நீ  வைக்கப்பட்டிருப்பதை - உணர்வாய் !

                                                                               -   சு.பெருமாள் (எ) காதல்சிவன் . 
                                                    
                       

ஆம் !

சூழ்நிலைக்கு  மனம் அலைவு !
மனநிலைக்கு மனிதன் அலைவு !
ஆம் !
கடவுளுக்கு  -  விதி
விதியிற்கு -  காலம்
காலத்திற்கு  - சூழ்நிலை
சூழ்நிலைக்கு - மனம்
மனதிற்கு - மனிதன்
அடிமைகள் !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உண்மையின் விழியில் !

முறையற்ற போரினால் வென்றது - தர்மம் !
அறமற்ற நிலைக்கொண்டு ஜெயித்தது - ஞாயம் !
உயிரற்றதைக்கொன்று பெருமைக்கொண்டது -  வீரம்!
இதுதான்  இராமாயணமும் மகாபாரதமும்  - 
உண்மையின் (என்) விழியில் .!
                                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .