பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தந்தையே ! சிவனே ! / என்ன விதித்தாயோ ?

என்ன விதித்தாயோ ?
என்னை விதைத்து.........
எண்ணி ஊழ்கிறேன் (வாழ்கிறேன்)
உன்னை நினைத்து............
தினமும் உதிக்கிறாய்
மறைகிறாய் சூரியனாய் !
பூக்கிறேன் சாய்கிறேன்
நானும் கூட பூவாய் .!
உன்னால் - உனக்கு .
உணருமோ - உன் உள்ளம் .
தந்தையே ! சிவனே ! 
                                    அன்புடன்  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அகப்படா அகப்பொருள் .

அகப்படா அகப்பொருள் .
அகப்படுத்தும் அருட்பொருள் .
அன்பினால் உயிர் பெறும் - கருப்பொருள் .
முடிவிலா முதற்ப்பொருள்.
முக்கால வினையிற்க்கும் - விதிப்பொருள் .
எக்கடவுளர்க்கும் தலைப்பொருள்
எம்முக்கண்ண இறைவன் சிவப்பெருமானே !
என் ஜட இயக்கத்தின் உயிரனே !
ஒம்காரனே ! சிவ ஈசனே !
இவன் சுவாசம் - இயங்கும் ஒவ்வொரு கணமும்
நின் நாமமே ! ஒலித்தல் கூடும் .
நின் பேரொளி அருளாலே !
எல்லா பிறவிக்கும் - எல்லா யுகத்திற்க்குமான நன்றி சிவனே !!!
                                                                           *  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .. .

கொடிதினும் கொடிது .

ஏழ்மையில் தள்ளியிருக்கலாம்
அல்லது நோய்மையில் தள்ளியிருக்கலாம்
காதலில் தள்ளிவிட்டாயே !
இறைவா ! இது .
அது இரண்டும் சேர்ந்த வலியல்லவோ ?
நான் உன்னிடம் அகப்பட்ட -
கறிவேப்பிலையோ ?
கொடிதினும் கொடிது
இளமையில் வறுமை !
அதனினும் கொடிது
காதலில் தனிமை !
                                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

நீ நின்ற இடமாய் .!

உடல் மீதான பயன்பொருள்
இல்லாத போதும் .
அவ்விடம் தனித்தே தெரியும்
பிற இட தோலை விட வெண்மையாய் !
அப்படித்தான் இக்கணம்
உடன் இல்லாத போதும்
தனித்தே தெரிகிறாய் உயிரில் !
நீ  நின்ற  இடமாய் .!
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அனிச்சை செயல் .

ஒன்றும் இழக்கவில்லை !
ஒன்றும் பெறவில்லை !
என்று  சொல்ல முடியாது !

என்ன இழக்கிறேன்
என்ன பெறுகிறேன் என்றும் - தெரியாது !

எதுமில்லையேல் !
இப்படி ஒரு அனிச்சை செயல் - நிகழாது !

அப்படி என்னதானோ ? புரியவில்லை !
தினம்போல் சுவாசம்போல்
எழுதிக்கொள்கிறது - பேனா (எழுதுகோல் )
உன் பெயரை - கையில் .!
                                                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மனம் - இன்ப மகிழ்வும் பெறுகிறது !

திருநீரும்
சந்தனமும் - ஆண்மை !
மஞ்சளும்
குங்குமமும் - பெண்மை !
இரண்டும் இணையும்போதுதான்
முகமும் வாழ்க்கையும்
ஒளிர்வு பெறுகிறது !
மனம் - இன்ப மகிழ்வும் பெறுகிறது !
                                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கொண்டேன் - வெற்றி !

சுய சரிதம்
எழுத முயன்றேன்
தோற்றுப்போனேன் !
நீயின்றி ஏது என் சுயம் .
ஆதலால் !
நம் சரிதம் எழுதி
கொண்டேன் - வெற்றி !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

என் தோல்விக்கான சான்று !

உன்னோடு ஒப்பிடுதல்
என் தோல்விக்கான சான்று !

இருந்தும் !
உன்னிடம்  தோல்விப்பெற  இதோ !

நீ என்னை விட அழகானவள் !
நீ என்னைவிட அதிகம் படித்தவள் !
நீ என்னைவிட வசதியானவள் !

உலக ஏற்புடையற்ற சிலவும் இதோ !

நான் உன்னை விடவும் நேர்மையானவன் !
உன்னை விடவும் உண்மையானவன் !
உன் அந்த மூவைத்தவிர்த்து
எல்லாவற்றிலும்  நான் - உயர்வானவன் !
                                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

பதில் எழுதுகிறது - ஆண்மை !

துவைத்து துய்க்க வேண்டும் !
துய்த்து துவைக்க வேண்டும் !
தூயவளின் துடுப்புகளை !

உடும்பு பிடியாய் பிடிக்கிறது
மனதை - மோகம் !

அவள் இடுப்புதனில் படியேற
விரைகிறது - தாகம் !

படிக்காமல் பரிச்சை எழுத -
பாய்கிறது இளமை !

கேட்காத கேள்விக்கும்
பதில் எழுதுகிறது - ஆண்மை !
                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஆணை முறைத்து கொண்டு .

எல்லா கனிகளிலும் காம்பு பின்னே இருக்கும் !
பெண்களில் மட்டும் முரணாய் முன்னே நிற்க்கும் !
ஆணை முறைத்து கொண்டு ...........
 .................................
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மௌனம் ஒன்றே சத்தியம் !

முட்டாள்கள் இடத்தில் !
அறிவாளியும் முட்டாளே !
இடம் ! பொருள் ! ஏவல் ! - மாறிப்போனால் .
தாழ்வு ஒன்றே சாத்தியம் !
மௌனம் ஒன்றே சத்தியம் !
உணர்பவன் உணர்வான் என் நித்தியம் !

                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அழுதுக்கொண்டிருக்கவே !

தன்னுறுப்பை தானே புணரும்
மிருகம் போல !
உன்னிடத்தில் என் செய்கை
ஆனதென்ன !
பழியிலும் பகையாய் !
இழிவிலும் ஈனமாய் !
ஊனமுற்ற மனமானேன் !
சிவனே உனை பகைத்து !
மன்னிப்பென்பதும் வேண்டாம் !
மரணமென்பதும் வேண்டாம் !
கொடிதாய் ஏதேனும்
வலிதாய் பெரிதாய் - தாரும் அய்யனே !
மனமுனைக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கவே !
                                                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன் மதியும் என் மதியும்

உன் மதியும் என் மதியும்
நமை சாய்க்க !
உன் விதியும் என் விதியும்
நமை சேர்க்க !
உன் உணர்வும் என் உணர்வும்
நமை வீழ்த்த !
நாம் நாமற்றோம் !
நாமிற்க்கும் மேலான ஒரு நிலையில் - ஒரு உலகில் !
                                                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உனக்கென்ன பயனோ ?

எனக்கென்னை பிடிக்காமல்
என் விதி எனை கொல்லுதே !

நீ ஒன்றே கதியென
மனம் எனை துரத்துதே !

மனிதனற்ற நிலைக்கு
மாயை என்னை தள்ளுதே !

மரணம் ஒன்றே உண்மை என்று
வாழ்வின் நீதி சொல்லுதே !

உனக்கென்ன பயனோ ?
எனை பயனற்றாக்கி !

எனை பயனற்று செய்வதில்
உனக்கென்ன பயனோ ? சிவனே ! 

இறைவனே ! நீ துரோகிதானோ ?
                                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

புத்தகங்கள் உரங்கவில்லை !

நீ வந்து விளையாடாமல்
என் தலைமுடிகள் கலையவில்லை !
நீ வந்து அடம்பிடிக்காமல்
வீட்டில் திண்பண்டங்கள் தீரவில்லை !
நீ வந்து கலைக்காமல்
புத்தகங்கள் உரங்கவில்லை !
நீ வராமல் நின்றுப்போனதால்
என் உறக்கமும் போனது  - உன்னோடுவே !
                                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உயர்வாய் - உயிராய் !

பெரிதாய் - அரிதாய்
உயர்வாய் - உயிராய்
உனைவிட என்று
ஏதுமில்லை அய்யனே !
எனக்குமட்டுமல்ல உன்னாலான
இந்த அண்ட சராச்சரத்திற்க்கும் - சிவனே !
                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

ஒரு காதல் !

வெண்தாள்கள்  மீது
எப்போதும் ஒரு காதல் !

உன்போன்றே அவையும்
பளிங்குக்கொண்டு நிற்ப்பதால் .

எழுதுவதற்குக்கூட மனம் கூசும் !
களங்கம் பெறுமோ என்று .

உன்னை எழுதுவதால் அது
புனிதம்தான் பெறுகிறது எனும்போது

மென்மேலும் எழுதுகிறேன்
நானும் வாழ்வுப்பெறவே ! ஈசனே !
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வையகம் சமன் பெற !

சூரியனுக்குள் பொட்டு வைப்பவன் நான் !
சூரியனையே பொட்டாய் வைப்பவள் அவள் !
சந்திரக்கட்டி ! சுந்தரி அவள் மேனிக்கு சோப்பு !
சிங்காரி அவளின் அங்காடி வானம் !
எங்கேயும் அவள் எல்லை !
அவளுக்கினை ஏதுமில்லை !
நெஞ்சூரம் அவள் பார்வை !
மஞ்சூரம் அவள் முகம் !
பஞ்சபூதம் தஞ்சம் கேட்கும்
அவள்செஞ்சிவ மேனியிலே !
அஞ்சாறு பிள்ளைகள் போதாது !
அவளால் வேண்டும் !
ஆயிரம் பிள்ளைகளேயினும் !
வையகம் சமன் பெற(வே)  !
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

தூக்குவேன் உன்னை !

என் உச்சபட்சம் உந்தன் சித்தம் !
நித்தம் உந்தன் நினைவே பித்தம் !
தத்தம் உன்னை தேடி நாளும் !
காதலிக்கிறேன் அடியேள்  நானும் !
அடே ! என்னை ஆட்க்கொள்ளு
இ(ல்)லையே ! அடியாட்கள் வைத்து
தூக்குவேன் உன்னை தூக்கில் கொல்ல !
                                                       சு.பெருமாள்.(எ) காதல்சிவன் .