பக்கங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

நலமாய் இருக்கிறாயோ ?




எனக்கொன்னென்றால்  பதறிப்போய்விடுவாய் !
இன்று என்ன செய்கிறாயோ ?
நான் சிதறிக்கிடக்கிறேன்.
அன்பு கொள்ள ஆளின்றி !
சாய்ந்துக்கொள்ள தோளின்றி !
மனம் மட்டும் உனை ஊண்றி!
விதியுடன் உன் s .பெருமாள்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

மாற்றான் மனைவி !



மோகம் கொண்டுதான் முனைந்தேன் அவளுடன்
கலவிக்கொள்ள  - நட்பென்று !

அவள் தாய்மை நோய்கொள்ள - செய்தது
என் கொடூர மனத்தை !

 உண்மையாகிப்போனேன் அவள்முன்
பொய்யானவன் என்பதை  உரித்து !

வெட்கி நின்றேன் அன்பைபெற தகுதியற்றவன் என்று
அனைத்துக்கொண்டாள் தானும் அவள் குழந்தையென்று  !

மிருகம் நான் மழலையானேன் -அவள்
அன்பின் பால் பருகியதால் !

                                           சு .பெருமாள் (எ ) காதல்சிவன்.


சனி, 9 அக்டோபர், 2010

ஆறறிவெல்லாம் சுயநலம் மிகுந்தது
ஐந்தறிவும் பேரறிவுமே
சற்று saman

தொடை இடை செங்கடலில் !

என் தொடை இடை செங்கடலில் !
உன் ஆண் ஞாயிறு அஸ்தமனமாகி !
என் வெப்ப அலை ஓய்ந்தால் !
என் உடல் உலகம் விடியும் தருணம் !
புது சூரியன் பிறக்கக்கூடும் !
வாடா ! எனில் சாய !
வந்தெனை சாய்க்க !
                                   
                            சு.பெருமாள்(எ)காதல்சிவன்

புவி அழகற்றுப்போய்விடும் .!

உன்னைவிட ஒரு கவிதை
சொற்களில் ஏதுமில்லை வையத்தில் !
உன்னோடு சேர்க்கையில்
எது ஒன்றும் கவிதையே உண்மையில் !
மண்ணைவிட்டு உன்னை தனித்தால்
புவி அழகற்றுப்போய்விடும் .!
என்னை விட்டு உன்னை பிரித்தால்
கடவுள் உயிரற்றுப்போய்விடும் !அன்பே !

                                             சு.பெருமாள்(எ )காதல்சிவன்

கடன்பெற்ற என்னை நான் !

குறையனே !
பிறஉயிர் குறைகாண குறையனே !
குற்றனே !
மானிடத்தை மன்னிக்கும் குற்றனே !
இறையனே !
பிறஉயிர் குறை நீக்கும் இறையனே !
தாயனே !
அனைத்துயிரை அரவணைக்கும் தாயனே !
அப்பனே !
எவ்வுயிர்க்கும் தன்னுயிரை
முன்னிறுத்தும் சிவனே !
அன்பினை சேமிக்கின்றேன்
உம்மிடம் கடன்பெற்ற என்னை நான்
திருப்பிக்கொடுக்கவே !
ஆசிர்வதிப்பாயே நிறையனே ! தந்தையே ! என்னன்பு இன்னும் கூடவே !
           
                                         சு.பெருமாள் (எ)காதல்சிவன் . 

என் உடலை திண்ணும் மண்ணும் சிவ சிவ என்றே சொல்லும் !

என் உடலை திண்ணும் மண்ணும்
சிவ சிவ என்றே சொல்லும் !
என்னுடனான எதுவும்
சிவ சிவ என்றே ஆகும் !
ஐம்புதமாக பூதநாதன் சிவம் !
அனைத்திலுமான அணுவாய் சிவம் !
அனைத்துயிர்க்குமான ஒரு சுவாசம் சிவம் !
இருளாய் ஒளியாய் ஓம்கார சிவம் !
உடலாய் உயிராய் சிவசக்தி சிவம் !
முதலாய் முடிவாய் பரம்பொருள் சிவம் !
எழுத்தாய் சொல்லாய் ஞான அருள்சிவம்!
இறையாய்  ஈசனாய் நமசிவாய சிவம்!
தாயாய் தந்தையாய் அம்மைஅப்பன் சிவம்!
விதியாய் வினையாய் காலபைரவ சிவம் !
பிறவிக்கடையாய் கரையாய் 
கைலாயநாத சிவம் !
யுகமாய் தவமாய் வரமாய்
அண்டசாரச்சர யாவுமாய்
முடிவிலா தொடராய் !
என்பெருமான் சிவபெருமான் சிவோம் !

                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திங்கள், 27 செப்டம்பர், 2010

என் பார்வை மறியல் !

உன்  ஆடை  உடைப்பட 
என்  பார்வை  மறியல் !
உன்  உடையின்  விடையில் 
உட்  சதையில் புதையல் !
உனை  அனைத்துப்பார்கையில் 
என்  அனைத்தும்  நனையல் !
என்  ஒட்டுமொத்தமும் 
உனக்குள்  அவிழல் !
நீ  முனுமுனுக்கும்  அவஸ்த்தையில்
என்  சுதி  இன்னும்  ஏற்றம் !
உடைப்படவும்   வலிப்படவும்
என்ன  ஒரு  ஆர்வம் !
உன்  கொடிப்பிடித்து  பயணித்து 
என்  கொடிஏற்றினேன்  உன்னில் 
இருவரும்  பறந்தோம் !
உச்சத்தின்  உச்சத்தில் !
வானத்தை  கீழேத்தள்ளி !
நம்  இளமையை  மேலே  அள்ளி !
ஓரிரு  ஐந்து நிமிடங்கள் 
சொர்க்கம்  நம்  காலில் 
சொக்கிப்போனது  .

                         சு.பெருமாள் (எ)காதல்சிவன் 

பெண்ணாக பிறந்திருந்தால் !

உன்னன்பின்  நுழைவாயில்  சேர 
என்   உயிர்  ஆயுள்  தவம் .
பெண்ணாக  பிறந்திருந்தால் 
உனை  மனப்பதொன்றே 
உறுதியான  இறுதியாய்  – காதல்கொண்டு  
கைலாயம்  அடைந்திருப்பேன்   - நின்  துணைவியாய் 
அப்பனே !
எனை  நீர்  ஆணாகப்படைத்ததில்
அடியேன்  உமை  பூஜித்து  மகிழ்வதொன்றே 
போதுமென்று  !  ஆர்ப்பரிக்கிறேன்  மனத்தால்  .
நன்றி  சிவனே !

                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மா கடலே !

மா  கடலே !
மா  மலையே !
மா  மழையே  !
மா  மகாதேவ ஈசுவரனே !
என்னன்பு  என்  செய்யும் 
உன்னன்பில்  உயிர்ப்பெறும் !
தன்நிகரிலா தாயவனே !
தவழ்கிறேன்  நின்  தாளில் 
மாமகிழ்  உயற்சிப்பெற்று !
                      சு.பெருமாள்(எ)காதல்சிவன் 

குழம்பு வைப்பேன் அவன் குருதியை !

திட்டி  தீர்க்க  வார்த்தைப்போதாது 
எட்டி  உதைத்தாலும்  என்  ஏக்கம் குறையாது !
அவனைக்கொன்ற  பின்னும் 
என் கோபம்  தீராது !
அவன்  சாம்பலைக்கூட   என்னால் 
போகட்டும்  என  விட்டுவிட  முடியாது !
கொடும்  பேயினும்  பேயவன் !
கேவல  நாயினும்  நாயவன் !
வெட்டி  பிளந்து 
கொன்றுக்குவித்து 
குழம்பு  வைப்பேன்  அவன்  குருதியை !
அவனுள்  அவன்  கடவுளெனும்  பருதியை
கண்டெடுத்து  வேரோடழிப்பேன்  அவன்  முழுமையை !
முடியுமென்றால்  !!!!!!!!?????????
முடியவில்லையே  ???????????
என்ன  செய்ய  ???????
அத்தனையும்  அவன்  என்னை  செய்கிறான்  அணு  அணுவாய்  கொன்று  …………

                        
                                                          சு.பெருமாள் (எ)காதல்சிவன்





  

என் உயிரது .

என்  ஐம்புலன் 
அவள்  விழிதனில்  உரைய
என்  உயிரது 
அவள்  இதயத்தில்  – ஊசல்  .
                 
                               சு.பெருமாள்
                           

ஒரு நாள் !

மரணம்  ஏற்க்கவும் 
ஒரு  நாள்  - மனம்   தயாராகிவிடும் 
இன்பத்தின்  உச்சமோ 
துன்பத்தின்  உச்சமோ 
வாழ்க்கை  – ஊடல்  பெற்று  .
    
                                   சு.பெருமாள்(எ)காதல்சிவன்

இரு கேள்விகள் !

*தவிர்க்க  முடியாத  இரு  கேள்விகள் 
நீ  ஏன்  ஆண் ?
நான்  ஏன்  பெண்  ?

கேட்கக்கூடாத  இரு  கேள்விகள் 
இன்னும் ஏன் என்னை  காயப்படுத்தவில்லை  ?
என்  கற்புக்கு  இன்னும்  எத்தனை  நாள் 
உன்  கெடுவோ ?

கேட்க  வேண்டிய  ஒரு  கேள்வி  !
எப்பொழுதுடா  எனை  மணப்பாய் !
நான்  எப்பொழுதுமே  உனக்காய்  .!
                                 
                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன்

கூறுகள் .

தூரலும் சாரலும் 
மழையின் ……………
முத்தமும்  வெட்கமும் 
ஊடலின்  ………………
நீயும்  நானும் 
காதலின்   கூறுகள்  .

                          சு.பெருமாள் (எ)காதல்சிவன் 

ஆயுத எழுத்தில் முக்திப்பெற்றேன் .

ஆத்திசூடி  கற்க  வந்தேன் 
அவள்  தேகத்தில் !
தலைகீழ்  – ஆயுத  எழுத்தில்  முக்திப்பெற்றேன் 
அவள்  பாகத்தில் !
இரண்டில்  தொடங்கி 
ஒன்றில்  முடித்து 
பாடம்  கற்றேனே  !
கற்று  முடியும்போது 
முற்றும்  முடிந்துப்போனேனே 
அவளுள்  ஐக்யமாகி !
                                    
                        சு.பெருமாள்(எ)காதல்சிவன்

அறிவுக்குறிகியது !

அறிவுக்குறிகியது !
அவள்  குறிகளில்  மனம்  உருகி !
குணம்  குன்றியது !
அவள்  உடல்தனை  தினம்  பருகி !
அறிவுக்குறிகியது !
அவள்  குறிகளில்  தினம்  பருகி !
குணம்  குன்றியது !
அவள்  உடலுக்காய்  மனம்  உருகி !.
அனல்  தனந்தது !
அவள்  அனைப்பினில் உயிர்  நழுவி !
அவள்  அக  இதழ்  தேனை !
இவன்  முக இதழ்  உறுஞ்சி !
ஆயுள்  பெற்றேன்  அடிமையாய் !
அவ்வவ்வபோது 
      அவள்  குழி   நிரம்பும்   என்  வழியாய் .! 

                                          சு.பெருமாள் (எ) காதல்சிவன்

செய்துவிடும் .

*இடமும் சூழ்நிலையும் 
மனதை  மாற்றக்கூடும் 
காலமும்  நிர்பந்தமும் 
மாற்றத்தை  அமைத்துவிடும் 
விதியும்  வாழ்க்கையும் 
கடவுளை  உணரசெய்யும் - செய்துவிடும்  .

                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் 

உன் என் .

* புதருக்குள்  ஓணான் புக 
நீயும்  தவம்  நானும்  தவம் 
                 உன்  என்  .
சூழல்  ஏனோ ? பகை 
இருள்  எழுந்து  நின்று 
ஓளி உறங்கியதைப்போல் 
மனங்கள்  ஏக்கம்  கொண்டு 
சதைகள்  வலிக்கொள்ளாமல்.
பிரிவில் நாம் .
                சு.பெருமாள் (எ) காதல்சிவன்

அறவே அற !

அறவே  அற 
அரனே  உமை 
அயராது   அனைத்துக்கொள்கிறேன்
என்னிலான  கர்மத்தையோ  ? அல்லது 
உன்னிலான  கருணையையோ  ?
வேரறுத்துவிடு  சிவனே !
நான்  சீராக  வாழ 
உம்மிடம்  விதியில்லையேல் ...
            
                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன்

எந்த கடவுளும் படிக்கவில்லையோ ?

அறிவு  சிறுத்து  உடல்  பெருத்ததோ  ?
ஆண்மை  சிறுத்து  கண்ணீர்  பெருத்ததோ ?
விழியின் வேற்றில்  ஊற்றாய்  பொங்கும் 
துன்பத்தின்  எச்சம் 
முகத்தில்  தெரியாமல்  விரல்கள்  மறைப்பினும் 
பேரலையாய்   முட்டி  முட்டி 
மனதை  மோதும்  
வலியின்  வேதம் 
எந்த கடவுளும்  படிக்கவில்லையோ  ?
வறுமையும்  ஏழ்மையும்  உடைகளாக 
தாழ்வும்  அடிமையும்  உடமைகளாக 
என்  பிறப்பினில்  – நிரந்தரம்  செய்தானோ ?
மானிடத்தை  நிறத்தினில்  பிரித்த 
வெறிப்பிடித்த  கடவுளன்  ?
                          சு.பெருமாள் (எ) காதல்சிவன் 

அவன்பால்

சொல்லால்  சொல்லின்  உயிரவன் 
உணர்ந்துப்பார்த்தால்  இறையவன்  
காதல்  கொண்டேன்  அவன்பால் 
கருத்தில்  நின்றேன்  அவனால் 
இன்பக்கடலில் மிதக்கிறேன் 
என்  பெண்மைக்கடந்த பேருலகில் 
அவன்மனையாய்  இருத்தல் ஒன்று  போதும் 
என்ற  என்  வாழ்வின்  தவம்  நிறைவுக்கொண்டு 
மகிழ்கிறேன் உளமார 
இனி  என்  உயிர்  இறைவனுக்கு  சமர்ப்பணம் 
                              
                                    சு .பெருமாள் (எ) காதல்சிவன் 

கொல்வாய் நீ

அனைத்துக்கொல்வாய் நீ 
அனைத்தும்  கொள்வாய் நீ 
என்னை  நீ  எனக்குள்  !
உன்னை  நீ  தந்து  !

                         சு .பெருமாள் 

வியாழன், 16 செப்டம்பர், 2010

யாதும் நீயே !

அகன்ற வாழை இலையில்   ஒரு  துளி  நீராய் 

பெரும்  பாலைவனத்தில்   ஒரு  சிறு புல்லாய்   !
எல்லையிலா  இருள்   வானில்  ஒரு  சுடர் நட்சத்திரமாய் !
உலகம்  முடிந்தப்பின்னே  ஒரு  சலனமில்லா  அமைதியாய்  !
எங்கேயும்  நீ  ! எல்லாவற்றிலும்  உயிர்  தீயாய்  நீ !
ஏது சொல்வேன்  மாயனே !  மயான  நாதனே  !
 யாதும்  எதுவும்  நீயே  நீயே  - சிவனே !
 சிறிதும் உனை  நீங்காது  தொடர்வேனே மனத்தால் !
 நீங்கினின் நிறைந்திருப்பேனே உனக்குள்ளே முடிவாய் !
                                                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
 

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

இனி நீ வந்தால் கூட

உனக்காக வேண்டி என் அனைத்தும் இழந்தேன் .!
இனி நீ வந்தால் கூட !
எனை நான் திரும்பப்பெற இயலாது .!
..............................................................
.............................................................
இதுப்போன்று நடக்கும்மென்று உத்தேசமாய் தெரியும்
ஆனால் இப்படி நடக்குமென்று சத்தியமாய் தெரியாது .
.........................................................
தோல்விப்பெறுவோம்  என்று தெளிவாய் தெரிந்தும்
அதை தொடர்ந்து செய்வதை என்னவென்று  சொல்வது ?
ஆம் ! அப்படித்தான் நான் .தெளிந்த முட்டாள் .
                                             
                                                                          சு.பெருமாள் (எ )காதல்சிவன்
................................................................

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தந்தையே ! சிவனே ! / என்ன விதித்தாயோ ?

என்ன விதித்தாயோ ?
என்னை விதைத்து.........
எண்ணி ஊழ்கிறேன் (வாழ்கிறேன்)
உன்னை நினைத்து............
தினமும் உதிக்கிறாய்
மறைகிறாய் சூரியனாய் !
பூக்கிறேன் சாய்கிறேன்
நானும் கூட பூவாய் .!
உன்னால் - உனக்கு .
உணருமோ - உன் உள்ளம் .
தந்தையே ! சிவனே ! 
                                    அன்புடன்  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அகப்படா அகப்பொருள் .

அகப்படா அகப்பொருள் .
அகப்படுத்தும் அருட்பொருள் .
அன்பினால் உயிர் பெறும் - கருப்பொருள் .
முடிவிலா முதற்ப்பொருள்.
முக்கால வினையிற்க்கும் - விதிப்பொருள் .
எக்கடவுளர்க்கும் தலைப்பொருள்
எம்முக்கண்ண இறைவன் சிவப்பெருமானே !
என் ஜட இயக்கத்தின் உயிரனே !
ஒம்காரனே ! சிவ ஈசனே !
இவன் சுவாசம் - இயங்கும் ஒவ்வொரு கணமும்
நின் நாமமே ! ஒலித்தல் கூடும் .
நின் பேரொளி அருளாலே !
எல்லா பிறவிக்கும் - எல்லா யுகத்திற்க்குமான நன்றி சிவனே !!!
                                                                           *  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .. .

கொடிதினும் கொடிது .

ஏழ்மையில் தள்ளியிருக்கலாம்
அல்லது நோய்மையில் தள்ளியிருக்கலாம்
காதலில் தள்ளிவிட்டாயே !
இறைவா ! இது .
அது இரண்டும் சேர்ந்த வலியல்லவோ ?
நான் உன்னிடம் அகப்பட்ட -
கறிவேப்பிலையோ ?
கொடிதினும் கொடிது
இளமையில் வறுமை !
அதனினும் கொடிது
காதலில் தனிமை !
                                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

நீ நின்ற இடமாய் .!

உடல் மீதான பயன்பொருள்
இல்லாத போதும் .
அவ்விடம் தனித்தே தெரியும்
பிற இட தோலை விட வெண்மையாய் !
அப்படித்தான் இக்கணம்
உடன் இல்லாத போதும்
தனித்தே தெரிகிறாய் உயிரில் !
நீ  நின்ற  இடமாய் .!
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அனிச்சை செயல் .

ஒன்றும் இழக்கவில்லை !
ஒன்றும் பெறவில்லை !
என்று  சொல்ல முடியாது !

என்ன இழக்கிறேன்
என்ன பெறுகிறேன் என்றும் - தெரியாது !

எதுமில்லையேல் !
இப்படி ஒரு அனிச்சை செயல் - நிகழாது !

அப்படி என்னதானோ ? புரியவில்லை !
தினம்போல் சுவாசம்போல்
எழுதிக்கொள்கிறது - பேனா (எழுதுகோல் )
உன் பெயரை - கையில் .!
                                                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மனம் - இன்ப மகிழ்வும் பெறுகிறது !

திருநீரும்
சந்தனமும் - ஆண்மை !
மஞ்சளும்
குங்குமமும் - பெண்மை !
இரண்டும் இணையும்போதுதான்
முகமும் வாழ்க்கையும்
ஒளிர்வு பெறுகிறது !
மனம் - இன்ப மகிழ்வும் பெறுகிறது !
                                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கொண்டேன் - வெற்றி !

சுய சரிதம்
எழுத முயன்றேன்
தோற்றுப்போனேன் !
நீயின்றி ஏது என் சுயம் .
ஆதலால் !
நம் சரிதம் எழுதி
கொண்டேன் - வெற்றி !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

என் தோல்விக்கான சான்று !

உன்னோடு ஒப்பிடுதல்
என் தோல்விக்கான சான்று !

இருந்தும் !
உன்னிடம்  தோல்விப்பெற  இதோ !

நீ என்னை விட அழகானவள் !
நீ என்னைவிட அதிகம் படித்தவள் !
நீ என்னைவிட வசதியானவள் !

உலக ஏற்புடையற்ற சிலவும் இதோ !

நான் உன்னை விடவும் நேர்மையானவன் !
உன்னை விடவும் உண்மையானவன் !
உன் அந்த மூவைத்தவிர்த்து
எல்லாவற்றிலும்  நான் - உயர்வானவன் !
                                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

பதில் எழுதுகிறது - ஆண்மை !

துவைத்து துய்க்க வேண்டும் !
துய்த்து துவைக்க வேண்டும் !
தூயவளின் துடுப்புகளை !

உடும்பு பிடியாய் பிடிக்கிறது
மனதை - மோகம் !

அவள் இடுப்புதனில் படியேற
விரைகிறது - தாகம் !

படிக்காமல் பரிச்சை எழுத -
பாய்கிறது இளமை !

கேட்காத கேள்விக்கும்
பதில் எழுதுகிறது - ஆண்மை !
                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஆணை முறைத்து கொண்டு .

எல்லா கனிகளிலும் காம்பு பின்னே இருக்கும் !
பெண்களில் மட்டும் முரணாய் முன்னே நிற்க்கும் !
ஆணை முறைத்து கொண்டு ...........
 .................................
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மௌனம் ஒன்றே சத்தியம் !

முட்டாள்கள் இடத்தில் !
அறிவாளியும் முட்டாளே !
இடம் ! பொருள் ! ஏவல் ! - மாறிப்போனால் .
தாழ்வு ஒன்றே சாத்தியம் !
மௌனம் ஒன்றே சத்தியம் !
உணர்பவன் உணர்வான் என் நித்தியம் !

                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அழுதுக்கொண்டிருக்கவே !

தன்னுறுப்பை தானே புணரும்
மிருகம் போல !
உன்னிடத்தில் என் செய்கை
ஆனதென்ன !
பழியிலும் பகையாய் !
இழிவிலும் ஈனமாய் !
ஊனமுற்ற மனமானேன் !
சிவனே உனை பகைத்து !
மன்னிப்பென்பதும் வேண்டாம் !
மரணமென்பதும் வேண்டாம் !
கொடிதாய் ஏதேனும்
வலிதாய் பெரிதாய் - தாரும் அய்யனே !
மனமுனைக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கவே !
                                                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன் மதியும் என் மதியும்

உன் மதியும் என் மதியும்
நமை சாய்க்க !
உன் விதியும் என் விதியும்
நமை சேர்க்க !
உன் உணர்வும் என் உணர்வும்
நமை வீழ்த்த !
நாம் நாமற்றோம் !
நாமிற்க்கும் மேலான ஒரு நிலையில் - ஒரு உலகில் !
                                                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உனக்கென்ன பயனோ ?

எனக்கென்னை பிடிக்காமல்
என் விதி எனை கொல்லுதே !

நீ ஒன்றே கதியென
மனம் எனை துரத்துதே !

மனிதனற்ற நிலைக்கு
மாயை என்னை தள்ளுதே !

மரணம் ஒன்றே உண்மை என்று
வாழ்வின் நீதி சொல்லுதே !

உனக்கென்ன பயனோ ?
எனை பயனற்றாக்கி !

எனை பயனற்று செய்வதில்
உனக்கென்ன பயனோ ? சிவனே ! 

இறைவனே ! நீ துரோகிதானோ ?
                                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

புத்தகங்கள் உரங்கவில்லை !

நீ வந்து விளையாடாமல்
என் தலைமுடிகள் கலையவில்லை !
நீ வந்து அடம்பிடிக்காமல்
வீட்டில் திண்பண்டங்கள் தீரவில்லை !
நீ வந்து கலைக்காமல்
புத்தகங்கள் உரங்கவில்லை !
நீ வராமல் நின்றுப்போனதால்
என் உறக்கமும் போனது  - உன்னோடுவே !
                                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உயர்வாய் - உயிராய் !

பெரிதாய் - அரிதாய்
உயர்வாய் - உயிராய்
உனைவிட என்று
ஏதுமில்லை அய்யனே !
எனக்குமட்டுமல்ல உன்னாலான
இந்த அண்ட சராச்சரத்திற்க்கும் - சிவனே !
                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

ஒரு காதல் !

வெண்தாள்கள்  மீது
எப்போதும் ஒரு காதல் !

உன்போன்றே அவையும்
பளிங்குக்கொண்டு நிற்ப்பதால் .

எழுதுவதற்குக்கூட மனம் கூசும் !
களங்கம் பெறுமோ என்று .

உன்னை எழுதுவதால் அது
புனிதம்தான் பெறுகிறது எனும்போது

மென்மேலும் எழுதுகிறேன்
நானும் வாழ்வுப்பெறவே ! ஈசனே !
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வையகம் சமன் பெற !

சூரியனுக்குள் பொட்டு வைப்பவன் நான் !
சூரியனையே பொட்டாய் வைப்பவள் அவள் !
சந்திரக்கட்டி ! சுந்தரி அவள் மேனிக்கு சோப்பு !
சிங்காரி அவளின் அங்காடி வானம் !
எங்கேயும் அவள் எல்லை !
அவளுக்கினை ஏதுமில்லை !
நெஞ்சூரம் அவள் பார்வை !
மஞ்சூரம் அவள் முகம் !
பஞ்சபூதம் தஞ்சம் கேட்கும்
அவள்செஞ்சிவ மேனியிலே !
அஞ்சாறு பிள்ளைகள் போதாது !
அவளால் வேண்டும் !
ஆயிரம் பிள்ளைகளேயினும் !
வையகம் சமன் பெற(வே)  !
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

தூக்குவேன் உன்னை !

என் உச்சபட்சம் உந்தன் சித்தம் !
நித்தம் உந்தன் நினைவே பித்தம் !
தத்தம் உன்னை தேடி நாளும் !
காதலிக்கிறேன் அடியேள்  நானும் !
அடே ! என்னை ஆட்க்கொள்ளு
இ(ல்)லையே ! அடியாட்கள் வைத்து
தூக்குவேன் உன்னை தூக்கில் கொல்ல !
                                                       சு.பெருமாள்.(எ) காதல்சிவன் .

சனி, 28 ஆகஸ்ட், 2010

நீ ! யாவுமாய் !

சுவாசித்து வெளிச்சென்றதில்
உள்ளத்தின் உள்ளே மறைந்துப்போன
சிறு காற்றாய் நீ !
இதுவரை வாழ்ந்ததில்
இன்னும் என்னில்
வெளிப்படா நானாய் நீ !
உள்ளம் உதித்த எண்ணங்களில்
எனக்கும் புலப்படா
ஓர் எண்ணம்  நீ !
ஒன்று மட்டும் சொல்வேன்
ஓம் சிவசக்தி  எனும்
உயிர்க்கொண்ட - மனம் கண்ட
விழி நின்ற - சிவோம் எனும்
கடவுளாய்  நீ ! யாவுமாய் !
                                                  சு.பெருமாள் ( எ ).காதல்சிவன் .

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என் முகம் பார் சமன் பெறுவாய் !

நீ ! - சோகத்தில் முழுகினும் !
மகிழ்ச்சியில் திளைப்பினும்  !

என் முகம் பார் சமன் பெறுவாய் !
பின் - உன் முகம் பார் மனம் தெளிவாய் !

நான் - சீவா தலையுடன் கரிப்படிந்த உடம்புடன்
வீதியின்  தெருவோரங்களில் குப்பைத்தொட்டியில்
ஏதேனும் தேடலில் - புன்னகைக்கும் சிறுவனாய் .!

நடைப்பயணத்தின் - வறுமை நிரம்பிய தாயின் தோளில்
அந்தி வெயில் சுடும் வேளையில்
அவள் வியர்வையும் என் பசிப்போக்கும்
என்ற நம்பிக்கையின் சிரிப்பில் உறங்கும் குழந்தையாய் .!


 உப்பு பூத்த உடலுடன்
களைப்பின் துணையுடன்
வரப்பில் கண்ணசரும் உழவனாய் .!

இதுப்போல் சில அடையாளங்களுடன்  - நானிருப்பேன் !
                   
                                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வெறிப்பிடித்து திரியும் நாய்ப்போல !

புத்திக்கெட்ட குரங்காய்
திமிர் பிடித்த காளையாய்
மதம் கொண்ட யானையாய்
பேய் பிடித்த பேதையாய்
வெறிப்பிடித்து திரியும் நாய்ப்போல !
களவு செய்து ஓடும் திருடன் போல !
நிலை தடுமாறி ஆடும் - மதுக்குடிகாரன் போல !
மனம் கெட்டு குணம் கெட்டு - அறிவுக்கெட்டு
மனிதத்தன்மையின்றியாய் .!
மார்க்கம் நிற்க்கும் - என்னை 
மதியனே ! கதிரனே ! - சிவனே !
உன்னடியேந்தி காத்திடுக அப்பா !
                                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

நிறுத்து !

கடவுளே ! உன் தவறை திருத்திக்கொள் !
என் தவற் திருத்தப்படும் .

உன் பிழைகளில் - நான் பிழையாகிறேன் !
உன் குற்றங்களால்
    நான் குறையாகிறேன் !

உன் சிரிப்பில்  நான் விழி நீராகிறேன் !
உன் ஆணவத்தில் - நான் அழியப்படுகிறேன் .

நிறுத்து ! - உன் தப்புக்களை !
இல்லையேல் உன்னைவிட ஒரு பெறும் சக்தி
அண்டத்தில் பிறக்கப்படும் .- உனை அழிக்க .

இது நீ எழுதிய விதியே !
                                                         - சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திமிர் பிடித்தவனே !

ஏனோ உன் மீதான காதல் !
உனக்காய் நான் எனக்குள் மோதல் !

இவள் பிறந்ததே - உனக்கென்றாய் !
என் உணர்வுகள் வேட்டை !

உன்னிடம் சொல்லாமல்
என் மௌனங்கள் சாட்டை !

தவிக்கிறேன் எனை மறக்கிறேன்
அவ்வவ்வபோது !

உதடுகள் உடையாதோ ?
சொற்க்கள் அவிழ்ந்துக்கொண்டு !

உள்ளம் மட்டும் பேசுகிறேன்
விழி வழியாய் - மோகமும்கொண்டு !

எனைப்புரிந்துக்கொள்ளடா !
விரைவாய் மணந்துக்கொள்ளடா !

என் பெண்மையை மிறச்செய்யும் - திமிர் பிடித்தவனே !

                                                                          * சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

நானும் !

உருப்படாதவனுக்கு
ஆயிரம் வித்தைகள் தெரியும் .
அதில் நானும் ஒரு(வன்) சிறுவன் .
                                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கேட்காது மனம் .!

எவன் சொல்லியும்
கேட்காது மனம் .!

சூழ்நிலை நிர்பந்திக்கும்
வாழ்வின் கணங்களே
அடுத்த நிலைக்கான வழி !

ஒருவன் வாழ்க்கை உணர்த்தும்
அனுபவங்களே அவனுக்கான சரி !

முரண்பாடு கொண்டது
வாழ்வும் மனமும் !

அ/இந்நிலை சற்று முரண் படும்போதெல்லாம்
வாழ்க்கை இனிக்கும் .!
                                                      சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

எனும்போதும் !

நீதான் எனைக்கொல்வாய் - எனும்போதும் !
உனையே நான் காதலிப்பேன் -
உயிருள்ளவரையும் .!
                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

என்ற நிலையில் நான் .!

கூரையில் எலி வாலாய் காதல் !
மதில்மேல் பூனையாய் காமம் !
கிணற்றுத் தவளைப்போல் மனம் !
திறந்த - உணவு பாத்திரம் நோக்கிய
சுவற்று பல்லிப்போல் வாழ்க்கை !
எதுவும் எப்படியும் நிகழலாம் !
என்ற நிலையில் நான் .!
                                               சு.பெ.காதல்சிவன்

சிவம் !

உள்ளார்ந்த அன்பில்
உயிர் நிறைந்த அமுதாய் !

மெய் சிலிர்க்கும் உணர்வில்
மனம் தொடும் பொருளாய் !

விழி தொடா கருவில்
கவி சூடும் காதலாய் !

நல் எண்ண செயலாலே
உனை சேரும் உலகாய் !

என்றும் என்னில் நின்னம் உம்மை
உதிக்கின்ற சிவனே !

உயிர்களின் வாழ்க்கை என்பதே
உன்னால் உருவாக்கப்பட்டு
உன்னை வந்து சேர்வதற்க்கான - ஒரு பயணமே !
என்பதை உணர்ந்து .!

பயணிக்கின்றேன் தந்தையே - உனை நாடி !
நின்தாள் ஒளி தருவாயே ! அப்பனே சிவனே !
                                      
                                             - நின்அடியான். சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

ஊசலில் நான்......... .

என் இரு - கையில் அடங்கா
அவளில் இருப்பு !
அவ்விருபுறமும் கண்டு - சிறு கணம்
நான் நானற்றேன் திகைப்பு !
பெண் காந்த அலையால்
என் உடல் முழுதும் பாதிப்பு !
தானியங்கி செயல்பாடு
எனில் ஒன்று உதிப்பு !
ஊசலில் நான்.........  .
உயிர் அவள் மையம்கொண்டு
ஏதோ ஓர் முனைப்பு !
இனி - சொல்ல
நான் நிலை - அல்ல ! 
நான் கீழான நிலையில்
மேலே உள்ளேன் .
மனித நிலைகடந்து .........
                                         - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

உயிர் எழ !

வலி இறக்க
வலி உயிர்க்க

கண்ணிர் பெருக்க
கண்ணிர் வற்ற

உயிர் எழ
உயிர் விழ

தனிமைப்பட்டு - பித்தனாகி
பைத்தியம்போல் .

சுற்று சுவர் அதிர - கதறியுள்ளேன்
அவளுக்காய் - என்னை நான் அற்று .

எல்லாம் வீணென இன்று ...
வருத்தப்படவோ ? என்னை இழிவுக்கொள்ளவோ ? - இல்லை !
அப்படி ! முடியவும் முடியாது .

அந்தந்த கால சூழ்நிலையில் அது எல்லாம் சரியே !
எல்லாவற்றிற்கும் மனமே காரணம் .
இதை இன்று மனமே சொல்கிறது .

ஆம் !
நான் அழவுமில்லை !
         சிரிக்கவுமில்லை !
இப்பொழுது வாழ்கிறேன் .
விதியும் - யதார்த்தமும்  புரிந்துக்கொண்டு .
                                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கால நீட்டிப்பு !

கால நீட்டிப்பு :
          சில இடத்தில் இன்பம் !
          சில இடத்தில் துன்பம் !
இச்சையில் நான் பச்சை !
பச்சையில் நான் சிகப்பு !
சிகப்பில் நான் உச்சம் !
                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உச்சக்கட்டம் !

என்றேனும் - உனை
மறுக்கின்ற நொடி
எனில் உயிர்க்குமேனில் !
அக்கணமே - எனை
கொன்றுவிடு சிவனே !

அமைதியின் அடுத்தக்கட்டம் - நிம்மதி !
நிம்மதியின் உச்சக்கட்டம் - சிவனடி !
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மகாராஜா !

ஆளும் வறுமை !
ஆட்டிப்படைக்க !
தேயும் வாழ்க்கை !
தேய்ந்துக்கிடக்க !
மனம் மட்டும் மகாராஜா !
கனவுக்கோட்டையிலே !
என்றாய்  - என் வாழ்க்கை !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன் நிர்வாணம் ! என் தீர்மானம் !

உன் நிர்வாணம் !
என் தீர்மானம் !

அதை நிறைவேற்றும் !
என் விரல் பாணம் (அம்பு) !

அதன்பின் செய்கை எனதல்ல
அதன் வினை ஊக்கியாவும் - உன்னிடமே !

உன் கடலில் விழுவேன்
உனை ஆட்டிவைப்பேன் - நீந்துவேன் .

அலையாய் எழுவாய் !
என் அனைப்பில் விழுவாய் !

புயலாய் வருவேன் - மழையாய் மாறி
உன் மடியில் முடிவேன் .

முன்னதாய் - தத்தளிப்பேன் ! பரிதவிப்பேன் !
அள்ளுவேன் உன்னை கொல்லுவாய் என்னை .

எனை நீ கொல்லும் முன்பே
கொன்றிருப்பேன் - முன்னமாய் உன்னை .

சுனாமியில் ஒதுங்கிய பிணமாய் !
நான் சிதைந்துக்கிடப்பேன் !

பூகம்பத்தில் உருக்குலைந்த  நிலமாய்
நீ சுக்குநூறாகிக்கிடப்பாய் !

மீண்டும் எழுவோம் !
மீண்டு ! மீண்டு ! மீண்டும் விழவே !
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

சனி, 21 ஆகஸ்ட், 2010

உடைப்படுகிறது - மனம் . பழி செயலோ ? - என்று .!

யோனி வழியே - வந்தவர்கள்
யோனியில் புக ஏங்குகிறார் !
ஆண்மை வழியே  - யோனிப்பெற்றவர்கள்
ஆண்மைக்காய் ஏங்குகிறார்  !
இருவர் ஏக்கம் - இயற்க்கை !
அடைதலும் எளிது !
பாவிமனிதன் வகுத்துக்கொண்ட
வரைமுறை தடுக்கிறது .!
உடல் - உடைப்படும்போதெல்லாம்
உடைப்படுகிறது - மனம் .
பழி செயலோ ? - என்று .!
                                                - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

காண்பதெல்லாம் காதலி !

மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் !
காதலில் விழுந்தவனுக்கு காண்பதெல்லாம் காதலி !
உன்னில் உயிர்த்துக்கொள்ள
ஒவ்வொரு நொடியும்
என்னை நான் இழக்கிறேன் - என்னில் .
மௌனத்தின் வலியால் .
                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திக்குமுக்காடிப்போனேன் !

உன் அங்கமைப்பில்
நான் சங்கமித்தேன் !

உன் பங்களிப்பில்
நான் திக்குமுக்காடிப்போனேன் !

வங்கக்கடல் சுரங்கம்
உன்னிடத்தில் அடங்கும் !

வானில் இல்லா சுவர்க்கம்
நம் வயிற்றுக்கு கீழே  கி(டை)டக்கும் !
                                                                       சு.பெ.காதல்சிவன் .

ஓர் ஒற்றன் !

உன்னிரு மேட்டின்
கூர் கரும் உச்சிதனை - விழி காணின் !

இவனுள்ளே ஒடுங்கி
ஒளிந்துக்கிடக்கும்  - ஓர் ஒற்றன் !

ஓங்காரமாய் எழுந்து
முழக்கமிடக்கூடும் !

போர்தனை புரிதல் செய்ய .!
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஏன் ?? உரைக்கவில்லை ..!!!

என் அறிவிற்க்கு
எட்டியதே இல்லை
அவள் மனதின் சூட்சமம் .

அவள் நினைவிலேயே உழல்கிறேன்
என் அறிவின்மையின் - மீட்சிமம் .

கடல் கரையை கடக்காது
உலகத்திற்கே தெரியும் .

அவளலையில் தத்தளிக்கும்
என் ஜென்மத்திற்கு  ஏன் ?? உரைக்கவில்லை ..!!!

                                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

பேராயுதம் - நாக்கு .!

எதிர்பார்ப்பற்ற உடன் பிறப்புகள் - விரல்கள் .
பேராயுதம் - நாக்கு .
கடைசி அஸ்திரம் - உயிர் .
வாழும்வரை ஆஸ்தி - உடல் .
இன்பத்திலும் துன்பத்திலும் போதை - மனம் .
எப்பொழுதுமே எந்த உறவுமின்றி
சொந்தமாய் இருக்கும்
உள்ளத்தில் ஒளிந்து நின்ற கடவுள் .!
                                                           - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கொம்பு முளைத்த இரு பூமி !

ஏதோ அதில் !
ஏனோ அவன் .
மர்மமாய் வைத்தான் !

அது ! தானே தன்னை முன்னிறுத்தும்
முன்னவர் மூளையில் தீ படுத்தும் !

நெஞ்சில் - நின்று !
உடன்பட்டவன் நெஞ்சைத்தாங்கும் !

அது ஆடும் ஆட்டத்திற்கு
ஆடவன் ஆடிப்போவான் !

எத்தனைப்பசி தீர்ந்தப்பின்னும்
அதன் வசி(ஈர்ப்பு) மாறாது !

நெருப்பது  உடல் வெளிப்புறம் சுடும் !
இதன் கருப்பது உடல் உட்புறம் சுடும் !

நெருப்பைத்தொட்டவன் புண்ணாகிப்போவான் !
இதனைத்தொட்டவன் ஆணாகிப்போவான் !

விரலுக்குத்தனி வீரம் வரும் !
பல்லிற்கு தனி சாரம் வரும் !

அய்யோ ! அய்யோ !
அதனுள் எத்தனை உண்மை - பொய்யோ !
 
ஒற்றைக் - கொம்பு  முளைத்த இரு பூமி !
அவள் தேகவானில் சுற்றுதே !

என் கம்பைப்பிடுங்கி அடிமையாக்கி !
அவளுலகில் கொல்லுதே !
                                                    -சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

நின் தாள் என் ஊழ் .!

உனை நம்பி நான்
ஏமாற்றப்படுவேனாயினும் !
உனை பூஜிப்பதால்
வஞ்சிக்கப்படுவேனாயினும் !
உனை ஏற்று அடிமையாகி - அழுதுக்கிடந்து
அழியப்படுவேனாயினும் ! 
என் அப்பனே ! சிவப்பெருமானே !
அப்பொழுதும் நீயே வேண்டும் - உடனாய் !
எப்பொழுதும் நீயே எந்தன்  உயிராய் !
இருந்தாலும் இறந்தாலும்
உன்னோடுவே உன்னில் நான் - உன்னாலே !
சிவசிவ என் தலைவனே ! நின் தாள் என் ஊழ் .!
                                              - காதலுடன்  சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

போதிமரம் நீ !

என் போதிமரம் நீ  !
என் பாதி உயிர் நீ !
என் வாழ்வின் வரம் நீ !
என் வாசல் வா நீ !
என் காதல்வாணி !
                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மண்டிக்கிடப்பேன் !

உன்னிடம்  அழுவதொன்றைத்தவிர
என்னால் இயன்றதொன்றும் கிடையாது !
இழப்பேனோ ? பெறுவேனோ ? தெரியாது !
நன்மை தீமை மனம் அறியாது !
உன்னிடம் மட்டுமே  மண்டிக்கிடப்பேன்.
சிவனே !
நீயே கதியென்று !
                                      சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

உணர்வாய் !

உதவிப்பெறு !
              பிறர் மனம் தெரியும் .
உதவிப்பாரு !
              உன் மனம் புரியும் .

உன் மனதில்  - கடவுளை வைத்துப்பார் !

கடவுள் மனதில்  - நீ  வைக்கப்பட்டிருப்பதை - உணர்வாய் !

                                                                               -   சு.பெருமாள் (எ) காதல்சிவன் . 
                                                    
                       

ஆம் !

சூழ்நிலைக்கு  மனம் அலைவு !
மனநிலைக்கு மனிதன் அலைவு !
ஆம் !
கடவுளுக்கு  -  விதி
விதியிற்கு -  காலம்
காலத்திற்கு  - சூழ்நிலை
சூழ்நிலைக்கு - மனம்
மனதிற்கு - மனிதன்
அடிமைகள் !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உண்மையின் விழியில் !

முறையற்ற போரினால் வென்றது - தர்மம் !
அறமற்ற நிலைக்கொண்டு ஜெயித்தது - ஞாயம் !
உயிரற்றதைக்கொன்று பெருமைக்கொண்டது -  வீரம்!
இதுதான்  இராமாயணமும் மகாபாரதமும்  - 
உண்மையின் (என்) விழியில் .!
                                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சிவனுக்கு தகும் . !

நான் !!!!! - என்பது !
சிவனுக்கு தகும் .
அது அவன் ஒருவனுக்கே - சரிமுறையாகும் . !

                                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உயிர் வேதம் !

என் வேரில் நீரை ஊற்றி !
உயிர் வேதம் கற்றுக்கொடுத்தான் .

பூ ! காய் ! கனி ! என்று
சுழற்சி விதி செய்தான் .

பிறப்பின் ரகசியத்தை
சற்று இறக்கசெய்து  உணர்த்தினான் .

ஞானம் பெற்றேன் !
என்னில் ஓர் உலகை உணர்ந்து
பலவாராய் அவனால் சுழற்றப்பெற்று .!

அவன் வெறும் ஆண் அல்ல !
அப்பொழுது அவன்தான் -  என் கடவுள் .!

எப்பொழுதும் அவன்தான் என் காவல் !
                                                                          - சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..
                              

அவன் நீதி !

கடவுள் மறுப்பே
கடவுளின் மற்றொரு பிறப்பு !
எவனெவனுக்கு எதுஎது  சரிஎனப்படுதோ  ?
அவனவன் அதுஅதை வைத்துக்கொள்ளட்டும் .
எந்த விதத்திலும் எல்லாமும் 
நல்லதைப்பெறவேண்டும்
முடிவாய் எல்லாமும் அவனுள்ளே  முடிய (அழிய)வேண்டும் .-அவன் நீதி !
                            - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

புவியின் அச்சு !

உன்னோடு ஒப்பிட
பொருளில்லை வையத்தில் !
பெண்ணே உன் மையத்தில்
புவியின் அச்சு !
உலகவிழி உனைப்பார்க்க
நீயோ எனை பார்க்க
அய்யோ நான் கடவுளாகிறேன் - காதலில் .
                                           சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

புதன், 18 ஆகஸ்ட், 2010

பாவம் இந்த மனிதன் .!

பணம் - மனிதனை திண்ணும் !
மனத்தினை கொல்லும் !
அறிவினை வெல்லும் !
போதையில் தள்ளும்  !
எல்லாவற்றிலும் தலையாய் - நில்லும் .
இன்ப - துன்பத்து முதுகெலும்பாய் நின்று . !
மனித வாழ்க்கையை பயமுறுத்தி செல்லும் . !
படைத்த மனிதனை(யே ) !
பகடைக்காய்  - ஆடி
அவனுக்கான  கடைக்குழியில் - புதைக்கும் எரிக்கும் .
மண்ணாய்ப்போவான் - மனிதன் .!
பணம் மட்டும் பல்லிளிக்கும்
மண் கூட எனைப்பொறுத்தே - மதிப்பென்று .!
                                                            -- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

காதலில் விழவில்லை நான் - மாறாய் எழுகிறேன் !

மெத்தன போக்கு அத்தனையும் -
                   சுக்கு நூறாய் உடைந்தன !
அவனுக்கென காத்துக்கொண்டு -
                   கால்கள் தவம் நின்றன !
யாரவனோ ? ஏனவனோ ? -
                   கேள்விக்கேட்கவில்லை மனம் .
என் பருவம் நாணி !
                 புருவம் உயர்ந்த காரணமென்னவோ ?
எனக்கான ஆண் இவனோ ?!. .
சரிந்தது மனம் -
                  அவன் நேர் பார்வையில் .!
சரிஎன்றது பெண்மை -
                   அவன் முதர்வார்தையில் .!
காதலில் விழவில்லை நான் -
                   மாறாய் எழுகிறேன்  !
அவன் மார்பில் மையம் கொண்டு
                 மாப்பிள்ளை மன்னன் என்று ! .
                                                                        -- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

முன்னே !

பாறைக்குள் ஒளிந்துகிடக்கும்
                                   - தேரைப்போல் (தவளை) !
எனக்குள் மறைந்துகிடந்தவளை
                               என் விழிகள் கண்டெடுத்ததோ இன்று ?
 அவள் என் முன்னே !
                                      ----சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

விரிந்த மார்பு !

அகன்ற நெற்றி !
விரிந்த மார்பு !
குறுகிய இடை !
கூறிய  மூக்கு  !
உயர்ந்த தோள்கள் !
வீரிய நடை !
தெளிந்த அறிவு !
நன்னடம் .!
ஒருவனின் சிறப்புகள் .
                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

அது .

விடைப்பெறவேண்டும் - அது
உன்னிடமும் என்னிடமும் .
ஓர் வினை செய்வோம்
அது விதிபெறவே !
                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!

உடல் கொண்டு வந்தேன்
உடனாய் உனையல்லவா கொண்டுவந்தேன் - உயிராய் !
சிவ ஈசனே !  எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!
என் மஞ்சமெல்லாம் தீர்ந்தபோது .
நஞ்சு நெஞ்ச நாயகனே !
யாவுமான உனக்கு - என் யாவுமே !
                                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கூடுமெனில் !

உயிரின் மீது
            மரணத்திற்கு காதல் !
மரணத்தின் மீது - உயிருக்கு
           காதல் கூடுமோ ? - கூடுமெனில் !
அவள் என்னைக்காதலிப்பால்.
                                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

ஈவு இரக்கமற்றவன் !

கோழைக்கடவுள் ஏழையாய் படைத்தான்
பரதேசிநாயவன் எனை முட்டாளாய் வைத்தான்
ஈவு இரக்கமற்றவன் என் அறிவின் வேற்றில்
அறியாமை எனும் நெருப்பைப்புதைத்தான்
அவனை மண்டிகிடக்கவே !
                                                    சு.பெ.காதல்சிவன் .

கடன்பட்டேன் உனக்கு .!

வாழ்வின் - கடன்பட்டேன் உனக்கு .
உடன்பட்டேன் அதற்க்கு .
எதுவரை உயிர் கணக்கு
அதுவரை நான் உனக்கு .
                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

உன்னிடம் நிலைக்கொள்ளவே !

என் கற்பனை தோற்றுவிடுகிறது
கடுகளவேயினும் உனை - நீ இப்படித்தான்
எனும் சுவடு நிறுத்த முயன்று !

ஒ(ய்)யாது  ஓய்கிறேன்
 உன்னிடம் தோற்ப்பதில் !

என்றேனும் நிலைக்கொள்வேன் என்பதில்
எள்ளளவும் உசிதமில்லை !

என்றபோதும்  உயிர் தீரும் வரையும்
முயன்றுக்கொண்டே இருப்பேன் - சிவனே !
உன்னிடம் நிலைக்கொள்ளவே !
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

மோகம் !

ஞானம் மங்கிவிடும்
             உன் ஞாலத்தில் விழுந்து !
மோனம் முளைத்துவிடும்
             உன் மார்க்கம் சுவாசித்து !
இறந்த விழி உயிர் பெறும்
             உன் மார்பகம் கண்டால் !
எரிந்த எலும்புக்கூடும் காமம் கொள்ளும்
            உன் பெண்குறி பாங்கால் !
இனி ஒன்றுமில்லை எனதென்று சொல்ல .
           அனைத்தும் உனக்குள் அனைந்துப்போக !
நான் உந்தன் மிச்சம்
            நீ எந்தன் எச்சம் !
சொச்சம் ஒன்று வரும் நாளை - அந்தி அதி காலை !
                                                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

என் தீர்க்கம் நீ !

* ஜென்மங்கள்  வேண்டும் நூறாய் !
  ஒவ்வொன்றிலும் நீயே உயிராய்  - என்றால்.!

* அடுத்தப்பிறவியும் இப்பொழுதே வாழ்கிறேன் !
  உன் விரல்களை பிடிக்கும் தருணம் .!

* பிறை நிலவு : அவள் வெட்டித்தெரித்த நகம் .!
   முழு நிலவு :  அவள் அகத்தின் பிம்பம் .!

*  உன்னை விட்டு மனம்  நீங்காது !
    நீங்கினால் உயிர் தங்காது - உடலில் .!

* பசித்திருக்கும் காளை நான்
  தீர்க்க வருவாயோ ?
  என் தீர்க்கம் நீ ! .
                                          சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
               

................?

................................................................
...............................................................?
உன் வார்த்தைகள் பிறக்காதவரை
இப்படித்தான் வெற்றிடமாய் கிடக்கும்
என் உயிரும் கூட .
                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

யாதும் நீயே !

அகன்ற வாழை இலையில் ஒரு துளி நீராய் !

பெரும் பாலைவனத்தில் ஒரு சிறு புல்லாய் !

எல்லையிலா இருள் வானில் ஒரு சுடர் நட்சத்திரமாய் !

உலகம் முடிந்தப்பின்னே ஒரு சலனமில்லா அமைதியாய் !

எங்கேயும் நீ ! எல்லாவற்றிலும் உயிர் தீயாய் நீ !

ஏது சொல்வேன் மாயனே ! மயான நாதனே !

யாதும் எதுவும் நீயே நீயே - சிவனே !

சிறிதும் உனை நீங்காது தொடர்வேனே மனத்தால் !

நீங்கினின் நிறைந்திருப்பேனே உனக்குள்ளே முடிவாய் !

                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

சனி, 14 ஆகஸ்ட், 2010

பெண்ணியம் !

இறுக்கிப்பிடித்தேன் உருகிப்போனான்
வாரிக்குடித்தேன் உயிரில் ஆனான் - ஆண் .
கண்ணில் எனை களவு செய்துப்போனவன்
கனவில் எனை கலவி செய்துப்போனானே!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

அவள் நினைவில் !

வெண்ணையில் செய்த கன்னங்கள்
எனை வழுக்கி விட்டன அவள் நினைவில் .!
எண்ணம் அவள் ஆனதினால்
கவிதையாகிறேன் அவள் நிழலில் .!
கள்ளங்கபடமற்றவள் அவள் புன்னகை ஆதாரம் .
மறைக்கின்ற காதல் அவள் விழிகளில் நாட்டியமாடும் !
ஆயிரம் சூரியன் ! என் முகத்தில் ஒளிவீசும் (ஒளிரும்)
அவள் தாமரை முகம் எனை நோக்கி மலரும்போது !
(அவள் தாமரை இதழ் எனக்காக விரியும்போது ).
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

சனி, 7 ஆகஸ்ட், 2010

நாத்திகன்

 
உண்மையிலேயே நீ இப்படித்தான் இருக்கிறாயோ?
அல்லது இது.
மனிதன் கற்பனைக்கான ஒரு உரு விளைவோ?
ஒரு கையில் ஒன்றாய் நான்கு கைகளிலும் ஏதோ ஒன்றை வைத்துள்ளாய்
இத்தனை அலங்காரமும் ஒப்பனைகளும் கொண்டுதான் நீ இருப்பாயோ ?
ஒரு சில கதையிர்க்கான அடையாளங்களாய் தவிர வேறு எந்த எதார்த்தத்திலும் உனை நான் பார்த்ததில்லை
நீ மனிதனைப்போலவே சதை உடல் ஐம்புலன் கொண்டு நிற்கிறாயே
இது மனிதனின் கற்பனை வடிவ எல்லைக்கான சான்று நிலையோ ?
இல்லை இதுதான் உன் உண்மை நிலையோ ?
உனக்கும் உயிருண்டு என்றால் நீ எப்பொழுது பிறந்தாய் எதன் முலம்.
ஒரு உயிருக்கான எல்லை மாறுமே தவிர முடிவு மாறது என்பது இயற்க்கை நீதி .
அதன்படி நீ இறந்து விட்டாயா? இல்லை உன் முடிவு எல்லை இன்னும் எத்தனை காலம் .
எந்த ஒன்றும் எந்த ஒரு உயிரும் ஒரு உள்ளிடு வெளியிடு கொண்டிருக்கும் தன் பின்பத்தை இயங்க செய்ய .
நீ எதை உண்கிறாய் எதை வெளியிடுகிறாய் ?
நீ அமைத்ததாய் -மனிதன் வகுத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் ராசி நட்சத்திரம் லக்னம் போன்றவையை உனக்கும் இது அது என்று
உன்னை அறிமுகம் படுத்தியவான்களான
என் முன்னோர்கள் சொல்லிவிட்டு போனான்கள்.
அதன்படி நீயும் என்றோ போயிருக்க - முடிந்திருக்க வேண்டுமே!
உண்மைதானே?
நீ பேசாத உயிரற்ற ஒரு சுவரில் தொங்கிநிற்கும் ஒரு ஓவிய படம் என்று தெரியும் .
இருந்தும் என்னவன்கள் சொல்வதைப்போல் நீ எங்கேனும் மறைந்திருந்தால் .
ஓவிய உன் முன்பாய் நின்று மௌனத்தில் கேட்பதாய் பார்க்கிறேன் .
இப்பொழுதாவது உண்மையை ஒப்புக்கொள் கடவுள் எனப்படும் கற்பனையே .
நீ பொய்தானே!?.
நீ மௌனம்மட்டுமே கொள்வதிலிருந்து ஒப்புக்கொண்டாய் என்று நினைக்கிறேன் .
நன்றி பொய்யே உனக்கு.
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

என்னவள் !

என்னவள்!

விதி எழுதும் அவள் விழிகள் !
நல் வினை செய்யும் அவள் விரல்கள் !
கவிப்பாடும் அவள் இதழ்கள் !
இயற்கையும் காதல் செய்யும் அவள் யதார்த்தம் !
அடக்கமும் அமைதியும் அவளின் தனிப்புலன்கள் !
தமிழிற்கு அவள் இன்னொரு உயிரெழுத்து !
அவள் பாதம் பட்டால் புண்ணியம் பெறும் பூமி !
அவள் பார்வைக்கண்டு தலைவணங்கும் சூரியன் !
அவள் தலைகனமற்ற பெண்மை !
தாய்மைக்கொரு உண்மை !
அவள் சொன்னால் நிற்கும் உலகம் !
அவள் அன்பிற்கான இமயம் !
பெண்ணாக பிறந்திருப்பாள் தேவதையாய் வளர்ந்திருப்பாள் !
அவள் பாசத்தை பார்க்கும்போது தெய்வமாகத்தான் தெரிகிறாள் !
எனக்கு மனைவியாய் மட்டுமல்ல தாயாகவும் குழந்தையாகவும்தான் !
பெருமிதத்துடன் அவள் கணவனாய் சு.பெருமாள் .

சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

மெல்லியாள்

மெல்லியாள் பார்வையில் மெழுகாகிறேன்
அல்லியவள் புன்னகையில் அழகாகிறேன்
கள்ளியவள் மௌனத்தில் கரைந்துப்போகிறேன்
அவள் கண்ணிமைக்கும் காதலில்உயிர்த்துககொள்கிறேன்.
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஊடல் .!

என் வாழ்வின் நுனியில் நீ  உச்சம்
உனை தொட்டுப்பார்த்ததில்  - என் உயிர் மிச்சம்
என் பசியிற்கு நீ உணவு - உன் உணர்வுக்கு நான் உறவு  
கட்டுப்பாடற்ற காம பேரலையில்-நான் கட்டுமரமானேன் உன் கரையில்.
இறுதிப்பெற்றது இருவரின் பயணம்
நொடிகளில் கரைந்தது நிகழ்வு
நினைவினில் பதிந்தது சுவடு.
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

புதன், 4 ஆகஸ்ட், 2010

பெண்மை அது உண்மை !

பெண்ணில் உயிர் முளைக்கும் பெண்மையில் உயிர் பிறக்கும் .
என்னைக்கொன்றப்பின் அவன் உயிர்ப்பெற்றான் என்னிடம் .
என்னைவென்றப்பின் அவன் மதிப்புப்பெற்றான் மண்ணிடம்.
பெண்மைஎன்பவள் ஓர் பேராழி  !
இதில் விழுந்து எழுந்தப்பின்தான் ஒவ்வொருவனும்
உயிர்ப்பெறுவதும் . மனிதனாவதும்.
                                                                                  
                                                                      -சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

விட்டுக்கொடுக்காதே!

விட்டுக்கொடுப்பவன் கோழையாய் பார்க்கப்படுகிறான்
பொறுமைக்கொண்டுப்போகாதே !
எருமையாகிப்போவாய் .
பிறர் அடிக்கும்போதே உதைத்துவிடு .
திருப்பி அடிக்க அவகாசம் கொடுக்காதே !
முழு நல்லவனாய் வாழ்வதில் எந்த அர்த்தமுமில்லை !
இது நான் அனுபவித்த உயிரின் எல்லை !
முடிந்தவரை வல்லவனாய் வாழ்ந்துவிட்டுப்போ !
எப்படி வாழ்வினும் ஒருநாள் !
உலகம் குறைசொல்லும்  உறவு பழிசொல்லும்
உனக்காக வாழ்ந்துவிட்டுப்போ
இருக்கும்வரை  சிரித்துவிட்டுப்போ .
                                                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

உண்மையான உண்மை !

உண்மையான  உண்மை !
அவனவன் சுயமொன்றே அவனவன்  மயம்.!

உடனென்றோ உறவென்றோ 
ஏதுமில்லை வையம் .!

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு சிந்தனை !
ஒவ்வொரு கணமும் வெவ்வேறு சூழல் !

பகைமையும் நட்பும் பிறரிடமல்ல
உணர்ந்துப்பார்த்தால் நம் மனமே எல்லை !

முடிவாய் முடிவது நம்மிடமல்ல
எல்லாம் முடிந்துப்போவது - சிவனிடமே ! 


                                                                                           சு.பெருமாள் (எ) காதல்சிவன் .