பக்கங்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

விட்டுக்கொடுக்காதே!

விட்டுக்கொடுப்பவன் கோழையாய் பார்க்கப்படுகிறான்
பொறுமைக்கொண்டுப்போகாதே !
எருமையாகிப்போவாய் .
பிறர் அடிக்கும்போதே உதைத்துவிடு .
திருப்பி அடிக்க அவகாசம் கொடுக்காதே !
முழு நல்லவனாய் வாழ்வதில் எந்த அர்த்தமுமில்லை !
இது நான் அனுபவித்த உயிரின் எல்லை !
முடிந்தவரை வல்லவனாய் வாழ்ந்துவிட்டுப்போ !
எப்படி வாழ்வினும் ஒருநாள் !
உலகம் குறைசொல்லும்  உறவு பழிசொல்லும்
உனக்காக வாழ்ந்துவிட்டுப்போ
இருக்கும்வரை  சிரித்துவிட்டுப்போ .
                                                                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக