பக்கங்கள்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

யாதும் நீயே !

அகன்ற வாழை இலையில் ஒரு துளி நீராய் !

பெரும் பாலைவனத்தில் ஒரு சிறு புல்லாய் !

எல்லையிலா இருள் வானில் ஒரு சுடர் நட்சத்திரமாய் !

உலகம் முடிந்தப்பின்னே ஒரு சலனமில்லா அமைதியாய் !

எங்கேயும் நீ ! எல்லாவற்றிலும் உயிர் தீயாய் நீ !

ஏது சொல்வேன் மாயனே ! மயான நாதனே !

யாதும் எதுவும் நீயே நீயே - சிவனே !

சிறிதும் உனை நீங்காது தொடர்வேனே மனத்தால் !

நீங்கினின் நிறைந்திருப்பேனே உனக்குள்ளே முடிவாய் !

                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக