பக்கங்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010

நாத்திகன்

 
உண்மையிலேயே நீ இப்படித்தான் இருக்கிறாயோ?
அல்லது இது.
மனிதன் கற்பனைக்கான ஒரு உரு விளைவோ?
ஒரு கையில் ஒன்றாய் நான்கு கைகளிலும் ஏதோ ஒன்றை வைத்துள்ளாய்
இத்தனை அலங்காரமும் ஒப்பனைகளும் கொண்டுதான் நீ இருப்பாயோ ?
ஒரு சில கதையிர்க்கான அடையாளங்களாய் தவிர வேறு எந்த எதார்த்தத்திலும் உனை நான் பார்த்ததில்லை
நீ மனிதனைப்போலவே சதை உடல் ஐம்புலன் கொண்டு நிற்கிறாயே
இது மனிதனின் கற்பனை வடிவ எல்லைக்கான சான்று நிலையோ ?
இல்லை இதுதான் உன் உண்மை நிலையோ ?
உனக்கும் உயிருண்டு என்றால் நீ எப்பொழுது பிறந்தாய் எதன் முலம்.
ஒரு உயிருக்கான எல்லை மாறுமே தவிர முடிவு மாறது என்பது இயற்க்கை நீதி .
அதன்படி நீ இறந்து விட்டாயா? இல்லை உன் முடிவு எல்லை இன்னும் எத்தனை காலம் .
எந்த ஒன்றும் எந்த ஒரு உயிரும் ஒரு உள்ளிடு வெளியிடு கொண்டிருக்கும் தன் பின்பத்தை இயங்க செய்ய .
நீ எதை உண்கிறாய் எதை வெளியிடுகிறாய் ?
நீ அமைத்ததாய் -மனிதன் வகுத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் ராசி நட்சத்திரம் லக்னம் போன்றவையை உனக்கும் இது அது என்று
உன்னை அறிமுகம் படுத்தியவான்களான
என் முன்னோர்கள் சொல்லிவிட்டு போனான்கள்.
அதன்படி நீயும் என்றோ போயிருக்க - முடிந்திருக்க வேண்டுமே!
உண்மைதானே?
நீ பேசாத உயிரற்ற ஒரு சுவரில் தொங்கிநிற்கும் ஒரு ஓவிய படம் என்று தெரியும் .
இருந்தும் என்னவன்கள் சொல்வதைப்போல் நீ எங்கேனும் மறைந்திருந்தால் .
ஓவிய உன் முன்பாய் நின்று மௌனத்தில் கேட்பதாய் பார்க்கிறேன் .
இப்பொழுதாவது உண்மையை ஒப்புக்கொள் கடவுள் எனப்படும் கற்பனையே .
நீ பொய்தானே!?.
நீ மௌனம்மட்டுமே கொள்வதிலிருந்து ஒப்புக்கொண்டாய் என்று நினைக்கிறேன் .
நன்றி பொய்யே உனக்கு.
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக