பக்கங்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010

என்னவள் !

என்னவள்!

விதி எழுதும் அவள் விழிகள் !
நல் வினை செய்யும் அவள் விரல்கள் !
கவிப்பாடும் அவள் இதழ்கள் !
இயற்கையும் காதல் செய்யும் அவள் யதார்த்தம் !
அடக்கமும் அமைதியும் அவளின் தனிப்புலன்கள் !
தமிழிற்கு அவள் இன்னொரு உயிரெழுத்து !
அவள் பாதம் பட்டால் புண்ணியம் பெறும் பூமி !
அவள் பார்வைக்கண்டு தலைவணங்கும் சூரியன் !
அவள் தலைகனமற்ற பெண்மை !
தாய்மைக்கொரு உண்மை !
அவள் சொன்னால் நிற்கும் உலகம் !
அவள் அன்பிற்கான இமயம் !
பெண்ணாக பிறந்திருப்பாள் தேவதையாய் வளர்ந்திருப்பாள் !
அவள் பாசத்தை பார்க்கும்போது தெய்வமாகத்தான் தெரிகிறாள் !
எனக்கு மனைவியாய் மட்டுமல்ல தாயாகவும் குழந்தையாகவும்தான் !
பெருமிதத்துடன் அவள் கணவனாய் சு.பெருமாள் .

சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக