பக்கங்கள்

சனி, 28 ஆகஸ்ட், 2010

நீ ! யாவுமாய் !

சுவாசித்து வெளிச்சென்றதில்
உள்ளத்தின் உள்ளே மறைந்துப்போன
சிறு காற்றாய் நீ !
இதுவரை வாழ்ந்ததில்
இன்னும் என்னில்
வெளிப்படா நானாய் நீ !
உள்ளம் உதித்த எண்ணங்களில்
எனக்கும் புலப்படா
ஓர் எண்ணம்  நீ !
ஒன்று மட்டும் சொல்வேன்
ஓம் சிவசக்தி  எனும்
உயிர்க்கொண்ட - மனம் கண்ட
விழி நின்ற - சிவோம் எனும்
கடவுளாய்  நீ ! யாவுமாய் !
                                                  சு.பெருமாள் ( எ ).காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக