பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என் முகம் பார் சமன் பெறுவாய் !

நீ ! - சோகத்தில் முழுகினும் !
மகிழ்ச்சியில் திளைப்பினும்  !

என் முகம் பார் சமன் பெறுவாய் !
பின் - உன் முகம் பார் மனம் தெளிவாய் !

நான் - சீவா தலையுடன் கரிப்படிந்த உடம்புடன்
வீதியின்  தெருவோரங்களில் குப்பைத்தொட்டியில்
ஏதேனும் தேடலில் - புன்னகைக்கும் சிறுவனாய் .!

நடைப்பயணத்தின் - வறுமை நிரம்பிய தாயின் தோளில்
அந்தி வெயில் சுடும் வேளையில்
அவள் வியர்வையும் என் பசிப்போக்கும்
என்ற நம்பிக்கையின் சிரிப்பில் உறங்கும் குழந்தையாய் .!


 உப்பு பூத்த உடலுடன்
களைப்பின் துணையுடன்
வரப்பில் கண்ணசரும் உழவனாய் .!

இதுப்போல் சில அடையாளங்களுடன்  - நானிருப்பேன் !
                   
                                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக