பக்கங்கள்

சனி, 9 அக்டோபர், 2010

கடன்பெற்ற என்னை நான் !

குறையனே !
பிறஉயிர் குறைகாண குறையனே !
குற்றனே !
மானிடத்தை மன்னிக்கும் குற்றனே !
இறையனே !
பிறஉயிர் குறை நீக்கும் இறையனே !
தாயனே !
அனைத்துயிரை அரவணைக்கும் தாயனே !
அப்பனே !
எவ்வுயிர்க்கும் தன்னுயிரை
முன்னிறுத்தும் சிவனே !
அன்பினை சேமிக்கின்றேன்
உம்மிடம் கடன்பெற்ற என்னை நான்
திருப்பிக்கொடுக்கவே !
ஆசிர்வதிப்பாயே நிறையனே ! தந்தையே ! என்னன்பு இன்னும் கூடவே !
           
                                         சு.பெருமாள் (எ)காதல்சிவன் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக