பக்கங்கள்

சனி, 9 அக்டோபர், 2010

என் உடலை திண்ணும் மண்ணும் சிவ சிவ என்றே சொல்லும் !

என் உடலை திண்ணும் மண்ணும்
சிவ சிவ என்றே சொல்லும் !
என்னுடனான எதுவும்
சிவ சிவ என்றே ஆகும் !
ஐம்புதமாக பூதநாதன் சிவம் !
அனைத்திலுமான அணுவாய் சிவம் !
அனைத்துயிர்க்குமான ஒரு சுவாசம் சிவம் !
இருளாய் ஒளியாய் ஓம்கார சிவம் !
உடலாய் உயிராய் சிவசக்தி சிவம் !
முதலாய் முடிவாய் பரம்பொருள் சிவம் !
எழுத்தாய் சொல்லாய் ஞான அருள்சிவம்!
இறையாய்  ஈசனாய் நமசிவாய சிவம்!
தாயாய் தந்தையாய் அம்மைஅப்பன் சிவம்!
விதியாய் வினையாய் காலபைரவ சிவம் !
பிறவிக்கடையாய் கரையாய் 
கைலாயநாத சிவம் !
யுகமாய் தவமாய் வரமாய்
அண்டசாரச்சர யாவுமாய்
முடிவிலா தொடராய் !
என்பெருமான் சிவபெருமான் சிவோம் !

                                              சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக