பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

காதலில் விழவில்லை நான் - மாறாய் எழுகிறேன் !

மெத்தன போக்கு அத்தனையும் -
                   சுக்கு நூறாய் உடைந்தன !
அவனுக்கென காத்துக்கொண்டு -
                   கால்கள் தவம் நின்றன !
யாரவனோ ? ஏனவனோ ? -
                   கேள்விக்கேட்கவில்லை மனம் .
என் பருவம் நாணி !
                 புருவம் உயர்ந்த காரணமென்னவோ ?
எனக்கான ஆண் இவனோ ?!. .
சரிந்தது மனம் -
                  அவன் நேர் பார்வையில் .!
சரிஎன்றது பெண்மை -
                   அவன் முதர்வார்தையில் .!
காதலில் விழவில்லை நான் -
                   மாறாய் எழுகிறேன்  !
அவன் மார்பில் மையம் கொண்டு
                 மாப்பிள்ளை மன்னன் என்று ! .
                                                                        -- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக