மெத்தன போக்கு அத்தனையும் -
சுக்கு நூறாய் உடைந்தன !
அவனுக்கென காத்துக்கொண்டு -
கால்கள் தவம் நின்றன !
யாரவனோ ? ஏனவனோ ? -
கேள்விக்கேட்கவில்லை மனம் .
என் பருவம் நாணி !
புருவம் உயர்ந்த காரணமென்னவோ ?
எனக்கான ஆண் இவனோ ?!. .
சரிந்தது மனம் -
அவன் நேர் பார்வையில் .!
சரிஎன்றது பெண்மை -
அவன் முதர்வார்தையில் .!
காதலில் விழவில்லை நான் -
மாறாய் எழுகிறேன் !
அவன் மார்பில் மையம் கொண்டு
மாப்பிள்ளை மன்னன் என்று ! .
-- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக