பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

பாவம் இந்த மனிதன் .!

பணம் - மனிதனை திண்ணும் !
மனத்தினை கொல்லும் !
அறிவினை வெல்லும் !
போதையில் தள்ளும்  !
எல்லாவற்றிலும் தலையாய் - நில்லும் .
இன்ப - துன்பத்து முதுகெலும்பாய் நின்று . !
மனித வாழ்க்கையை பயமுறுத்தி செல்லும் . !
படைத்த மனிதனை(யே ) !
பகடைக்காய்  - ஆடி
அவனுக்கான  கடைக்குழியில் - புதைக்கும் எரிக்கும் .
மண்ணாய்ப்போவான் - மனிதன் .!
பணம் மட்டும் பல்லிளிக்கும்
மண் கூட எனைப்பொறுத்தே - மதிப்பென்று .!
                                                            -- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக