பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

உயிர் எழ !

வலி இறக்க
வலி உயிர்க்க

கண்ணிர் பெருக்க
கண்ணிர் வற்ற

உயிர் எழ
உயிர் விழ

தனிமைப்பட்டு - பித்தனாகி
பைத்தியம்போல் .

சுற்று சுவர் அதிர - கதறியுள்ளேன்
அவளுக்காய் - என்னை நான் அற்று .

எல்லாம் வீணென இன்று ...
வருத்தப்படவோ ? என்னை இழிவுக்கொள்ளவோ ? - இல்லை !
அப்படி ! முடியவும் முடியாது .

அந்தந்த கால சூழ்நிலையில் அது எல்லாம் சரியே !
எல்லாவற்றிற்கும் மனமே காரணம் .
இதை இன்று மனமே சொல்கிறது .

ஆம் !
நான் அழவுமில்லை !
         சிரிக்கவுமில்லை !
இப்பொழுது வாழ்கிறேன் .
விதியும் - யதார்த்தமும்  புரிந்துக்கொண்டு .
                                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக