வலி இறக்க
வலி உயிர்க்க
கண்ணிர் பெருக்க
கண்ணிர் வற்ற
உயிர் எழ
உயிர் விழ
தனிமைப்பட்டு - பித்தனாகி
பைத்தியம்போல் .
சுற்று சுவர் அதிர - கதறியுள்ளேன்
அவளுக்காய் - என்னை நான் அற்று .
எல்லாம் வீணென இன்று ...
வருத்தப்படவோ ? என்னை இழிவுக்கொள்ளவோ ? - இல்லை !
அப்படி ! முடியவும் முடியாது .
அந்தந்த கால சூழ்நிலையில் அது எல்லாம் சரியே !
எல்லாவற்றிற்கும் மனமே காரணம் .
இதை இன்று மனமே சொல்கிறது .
ஆம் !
நான் அழவுமில்லை !
சிரிக்கவுமில்லை !
இப்பொழுது வாழ்கிறேன் .
விதியும் - யதார்த்தமும் புரிந்துக்கொண்டு .
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக