பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

சிவம் !

உள்ளார்ந்த அன்பில்
உயிர் நிறைந்த அமுதாய் !

மெய் சிலிர்க்கும் உணர்வில்
மனம் தொடும் பொருளாய் !

விழி தொடா கருவில்
கவி சூடும் காதலாய் !

நல் எண்ண செயலாலே
உனை சேரும் உலகாய் !

என்றும் என்னில் நின்னம் உம்மை
உதிக்கின்ற சிவனே !

உயிர்களின் வாழ்க்கை என்பதே
உன்னால் உருவாக்கப்பட்டு
உன்னை வந்து சேர்வதற்க்கான - ஒரு பயணமே !
என்பதை உணர்ந்து .!

பயணிக்கின்றேன் தந்தையே - உனை நாடி !
நின்தாள் ஒளி தருவாயே ! அப்பனே சிவனே !
                                      
                                             - நின்அடியான். சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக