உள்ளார்ந்த அன்பில்
உயிர் நிறைந்த அமுதாய் !
மெய் சிலிர்க்கும் உணர்வில்
மனம் தொடும் பொருளாய் !
விழி தொடா கருவில்
கவி சூடும் காதலாய் !
நல் எண்ண செயலாலே
உனை சேரும் உலகாய் !
என்றும் என்னில் நின்னம் உம்மை
உதிக்கின்ற சிவனே !
உயிர்களின் வாழ்க்கை என்பதே
உன்னால் உருவாக்கப்பட்டு
உன்னை வந்து சேர்வதற்க்கான - ஒரு பயணமே !
என்பதை உணர்ந்து .!
பயணிக்கின்றேன் தந்தையே - உனை நாடி !
நின்தாள் ஒளி தருவாயே ! அப்பனே சிவனே !
- நின்அடியான். சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக