பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

கொம்பு முளைத்த இரு பூமி !

ஏதோ அதில் !
ஏனோ அவன் .
மர்மமாய் வைத்தான் !

அது ! தானே தன்னை முன்னிறுத்தும்
முன்னவர் மூளையில் தீ படுத்தும் !

நெஞ்சில் - நின்று !
உடன்பட்டவன் நெஞ்சைத்தாங்கும் !

அது ஆடும் ஆட்டத்திற்கு
ஆடவன் ஆடிப்போவான் !

எத்தனைப்பசி தீர்ந்தப்பின்னும்
அதன் வசி(ஈர்ப்பு) மாறாது !

நெருப்பது  உடல் வெளிப்புறம் சுடும் !
இதன் கருப்பது உடல் உட்புறம் சுடும் !

நெருப்பைத்தொட்டவன் புண்ணாகிப்போவான் !
இதனைத்தொட்டவன் ஆணாகிப்போவான் !

விரலுக்குத்தனி வீரம் வரும் !
பல்லிற்கு தனி சாரம் வரும் !

அய்யோ ! அய்யோ !
அதனுள் எத்தனை உண்மை - பொய்யோ !
 
ஒற்றைக் - கொம்பு  முளைத்த இரு பூமி !
அவள் தேகவானில் சுற்றுதே !

என் கம்பைப்பிடுங்கி அடிமையாக்கி !
அவளுலகில் கொல்லுதே !
                                                    -சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக