பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

நின் தாள் என் ஊழ் .!

உனை நம்பி நான்
ஏமாற்றப்படுவேனாயினும் !
உனை பூஜிப்பதால்
வஞ்சிக்கப்படுவேனாயினும் !
உனை ஏற்று அடிமையாகி - அழுதுக்கிடந்து
அழியப்படுவேனாயினும் ! 
என் அப்பனே ! சிவப்பெருமானே !
அப்பொழுதும் நீயே வேண்டும் - உடனாய் !
எப்பொழுதும் நீயே எந்தன்  உயிராய் !
இருந்தாலும் இறந்தாலும்
உன்னோடுவே உன்னில் நான் - உன்னாலே !
சிவசிவ என் தலைவனே ! நின் தாள் என் ஊழ் .!
                                              - காதலுடன்  சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக