சொல்லால் சொல்லின் உயிரவன்
உணர்ந்துப்பார்த்தால் இறையவன்
காதல் கொண்டேன் அவன்பால்
கருத்தில் நின்றேன் அவனால்
இன்பக்கடலில் மிதக்கிறேன்
என் பெண்மைக்கடந்த பேருலகில்
அவன்மனையாய் இருத்தல் ஒன்று போதும்
என்ற என் வாழ்வின் தவம் நிறைவுக்கொண்டு
மகிழ்கிறேன் உளமார
இனி என் உயிர் இறைவனுக்கு சமர்ப்பணம் சு .பெருமாள் (எ) காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக