பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

எந்த கடவுளும் படிக்கவில்லையோ ?

அறிவு  சிறுத்து  உடல்  பெருத்ததோ  ?
ஆண்மை  சிறுத்து  கண்ணீர்  பெருத்ததோ ?
விழியின் வேற்றில்  ஊற்றாய்  பொங்கும் 
துன்பத்தின்  எச்சம் 
முகத்தில்  தெரியாமல்  விரல்கள்  மறைப்பினும் 
பேரலையாய்   முட்டி  முட்டி 
மனதை  மோதும்  
வலியின்  வேதம் 
எந்த கடவுளும்  படிக்கவில்லையோ  ?
வறுமையும்  ஏழ்மையும்  உடைகளாக 
தாழ்வும்  அடிமையும்  உடமைகளாக 
என்  பிறப்பினில்  – நிரந்தரம்  செய்தானோ ?
மானிடத்தை  நிறத்தினில்  பிரித்த 
வெறிப்பிடித்த  கடவுளன்  ?
                          சு.பெருமாள் (எ) காதல்சிவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக