அறிவு சிறுத்து உடல் பெருத்ததோ ?
ஆண்மை சிறுத்து கண்ணீர் பெருத்ததோ ?
விழியின் வேற்றில் ஊற்றாய் பொங்கும்
துன்பத்தின் எச்சம்
முகத்தில் தெரியாமல் விரல்கள் மறைப்பினும்
பேரலையாய் முட்டி முட்டி
மனதை மோதும்
வலியின் வேதம்
எந்த கடவுளும் படிக்கவில்லையோ ?
வறுமையும் ஏழ்மையும் உடைகளாக
தாழ்வும் அடிமையும் உடமைகளாக
என் பிறப்பினில் – நிரந்தரம் செய்தானோ ?
மானிடத்தை நிறத்தினில் பிரித்த
வெறிப்பிடித்த கடவுளன் ?
சு.பெருமாள் (எ) காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக