திட்டி தீர்க்க வார்த்தைப்போதாது
எட்டி உதைத்தாலும் என் ஏக்கம் குறையாது !
அவனைக்கொன்ற பின்னும்
என் கோபம் தீராது !
அவன் சாம்பலைக்கூட என்னால்
போகட்டும் என விட்டுவிட முடியாது !
கொடும் பேயினும் பேயவன் !
கேவல நாயினும் நாயவன் !
வெட்டி பிளந்து
கொன்றுக்குவித்து
குழம்பு வைப்பேன் அவன் குருதியை !
அவனுள் அவன் கடவுளெனும் பருதியை
கண்டெடுத்து வேரோடழிப்பேன் அவன் முழுமையை !
முடியுமென்றால் !!!!!!!!?????????
முடியவில்லையே ???????????
என்ன செய்ய ???????
அத்தனையும் அவன் என்னை செய்கிறான் அணு அணுவாய் கொன்று …………
சு.பெருமாள் (எ)காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக