பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

உனக்கென்ன பயனோ ?

எனக்கென்னை பிடிக்காமல்
என் விதி எனை கொல்லுதே !

நீ ஒன்றே கதியென
மனம் எனை துரத்துதே !

மனிதனற்ற நிலைக்கு
மாயை என்னை தள்ளுதே !

மரணம் ஒன்றே உண்மை என்று
வாழ்வின் நீதி சொல்லுதே !

உனக்கென்ன பயனோ ?
எனை பயனற்றாக்கி !

எனை பயனற்று செய்வதில்
உனக்கென்ன பயனோ ? சிவனே ! 

இறைவனே ! நீ துரோகிதானோ ?
                                                                 சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக